சென்னை:  பொதுமக்கள் வந்து செல்லும் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில்  பெண் உடல் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மெரினா கடற்​கரை​யில் உள்ள அண்ணா சதுக்கம் பின்​புறம் கல்​லுக்​குட்டை என்ற பகுதி உள்​ளது. இந்த பகு​தி​யில் விபச்சாரம் உள்பட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த பகுதியில்,  35 வயது மதிக்​கத்​தக்க பெண் ஒரு​வரது சடலம் கிடப்​ப​தை அறிந்த சிலர், இதுகுறித்து  காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல்  தெரிவித்தனர்.

இதையடுத்​து, அண்ணா சதுக்​கம் போலீ​ஸார் அங்கு விரைந்​தனர். அங்கு சுடி​தார் அணிந்த பெண் சடலம், தலை துண்​டிக்​கப்​பட்டு அழுகிய நிலை​யில் கிடந்​தது. அநத  அந்த பெண்​ணின் சடலத்தை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு போலீ​ஸார் அனுப்பி வைத்​தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தலை துண்டிக்கப்பட்ட நிலையில்,  இறந்து கிடந்த பெண்  யார், எந்த பகு​தி​யைச் சேர்ந்​தவர் என உடனடி​யாக தெரிய​வில்​லை. அவர் கொலை செய்யப்பட்டாரா, அல்லது அவரை யாரும் கடத்தி வந்து, பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு கொலை செய்தனரா, அவரது  தலை துண்​டித்து கொலை செய்​யப்​பட்டு கடலில் வீசப்​பட்​டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகம் முழு​வதும் காணா​மல் போன பெண்​களில் விவரங்​களை பெற்றும் விசா​ரித்து வருகின்றனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.