சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்பட பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில், ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, செம்பரம்பாக்கம், பூண்டி,  புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அதிகரிப்பு அதிகரித்துள்ளதால், ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இரக்கும்படி அடிவுறுத்தப்பட்டு உள்ளது.  இந்​திய வானிலை ஆய்வு மையம், சென்னை  திரு​வள்​ளூர், காஞ்சிபுரம்  மாவட்​டத்​துக்கு கனமழைக்​கான எச்​சரிக்​கையை தொடர்ந்து விடுத்து வரு​கிறது.

இதனால், சென்னை குடிநீர் ஏரி​களில் முக்​கிய ஏரி​யான பூண்டி ஏரியி​லிருந்து கடந்த நவ.27-ம் தேதி முதல் உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வந்​தது. சில நாட்​கள் கழித்து நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர்​வரத்து படிப்​படி​யாக குறைந்​த​தால், உபரிநீர் வெளி​யேற்​றம் நிறுத்​தப்​பட்​டது.

பின்னர் மீண்டும் பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால்,  பூண்டி ஏரி முழு கொள்​ளளவை எட்​டும் நிலை​யில் உள்​ள​தால் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக, நேற்று காலை 8 மணி​யள​வில் பூண்டி ஏரியி​லிருந்து மீண்​டும் உபரிநீர் திறக்​கப்​பட்​டது.

திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் பெய்து வரும் தொடர் மழை​யால், பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்​வரத்து உள்​ளது.  இன்று காலை 6 மணி​யள​வில் விநாடிக்கு 2,540 கனஅடி நீர்​வரத்து இருந்​தது. இதனால், 3,231 மில்​லியன் கனஅடி கொள்​ளளவு மற்​றும் 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரி​யின் நீர் இருப்பு 2,851 மில்​லியன் கனஅடி​யாக​வும், நீர்​மட்ட உயரம் 34.09 அடி​யாக​வும் இருந்​தது.

தொடர் மழை​யால் புழல் ஏரி, முழு கொள்​ளளவை எட்​டும் நிலை​யில் இருந்​த​தால், நேற்று முன் தினம் மதி​யம் முதல், புழல் ஏரியி​லிருந்து உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. நேற்று மாலை 5 மணி முதல், 2000 கனஅடி உபரிநீர் திறக்​கப்​பட்ட நிலையில், இன்று புழல் ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2,500 கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

 சோழ​வரம் ஏரியி​லிருந்து தற்போது விநாடிக்கு 500 கனஅடி உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது.

ஊத்​துக்​கோட்டை அருகே ஆந்​திர மாநில பகு​தி​யில் ஆரணி ஆற்​றின் குறுக்கே உள்​ளது பிச்​சாட்​டூர் அணை. 1.85 டி.எம்​.சி. கொள்​ளளவு கொண்ட இந்த அணை, மழை​யால் முழு கொள்​ளளவை எட்​டும் நிலை​யில் உள்​ளது. தற்​போது விநாடிக்கு 800 கனஅடி உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது.

பிச்​சாட்​டூர் அணையி​லிருந்து திறக்​கப்​பட்​டுள்ள உபரிநீர் இன்று தமிழக எல்​லை​யான ஊத்​துக்​கோட்டை பகு​திக்கு வந்​தடை​யும் என, எதிர்​பார்க்​கப்​படு​வ​தாக நீர்வள ஆதா​ரத் துறை​யினர் தெரி​வித்​துள்​ளனர்.

காஞ்​சிபுரம் மாவட்​டம், குன்​றத்​தூர் வட்​டத்​தில் அமைந்​துள்ள செம்​பரம்​பாக்​கம் ஏரி​யின் மொத்த கொள்​ளளவு 3.645 டிஎம்சி (3645 மில்​லியன் கன அடி) மற்​றும் அதன் மொத்த ஆழம் 24 அடி ஆகும். இந்த ஏரி​யில் நேற்​றைய நில​வரப்​படி ஏரி​யில் 3.135 டிஎம்சி நீர் இருப்பு உள்​ளது, இது 22.06 அடி ஆழமாகும். மேலும், ஏரிக்கு நீர்​வரத்து விநாடிக்கு 1,400 கனஅடி​யாக உள்​ளது. விநாடிக்கு 200 கனஅடி வீதம் உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது.செம்​பரம்​பாக்​கம் ஏரி​யில் ஆட்​சி​யர் கலைச்​செல்​வி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்​வின்​போது, ஸ்ரீபெரும்​புதூர் வரு​வாய் கோட்​டாசி​யர் சி.​பாலாஜி, குன்​றத்​தூர் வட்​டாட்​சி​யர் சேரன்​தயன், நீர்​வளத் துறை உதவி பொறி​யாளர் தனசேகரன் உடன் இருந்​தனர். காஞ்​சிபுரத்​தில் பெய்த தொடர் மழை காரண​மாக காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் 14 ஏரி​கள் நிரம்​பி​யுள்​ளன.