திருவண்ணாமலை: பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமாக உள்ள திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீம் இன்று மாலை அண்ணாலைலையார் வீற்றிருக்கும் மலையின் உச்சியில் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி, இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்பட்டது.
தீப திருவிழாவையொட்டி, அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் 15ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர் இதற்கிடையில் போலி பாஸ் தயாரித்ததாக கோவில் ஆணையரின் கார் ஓட்டுநனர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா கடந்த நவ.24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் 9-ஆம் நாளான நேற்று ஸ்ரீசந்திரசேகரா் புருஷா மிருக வாகனத்தில் மாடவீதியில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், முக்கிய நிகழ்வான 10ம் நாள் திருவிழாவான காா்த்திகை தீபத்திருவிழா இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது.
அண்ணாமலையார் குடியிருக்கும் 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் ஏற்றுவதற்கனா தீபம் கொப்பரை நேற்று மலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இன்று மகா தீப திருவிழா நடைபெற உள்ள நிலையில், அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரா் கோயில் சுவாமி சந்நிதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. . அதைத் தொடா்ந்து மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.
இதற்காக கொப்பரையும், திரியும் உரிய பூஜைகள் செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை மலைக்கு கொண்டு செல்லப்பட்டன. ஆண்டுக்கு ஒரு முறை சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் அா்த்தநாரீஸ்வரா் ஆனந்த தாண்டவம் ஆடியபடி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் பக்தா்களுக்கு காட்சி தருவாா்.
கோயிலில் அதிகாலை பரணி தீபத்தை தரிசிக்கவும் மாலை கோயிலில் இருந்து மகா தீபத்தையும் அா்த்தநாரீஸ்வரரையும் தரிசனம் செய்வதற்கும் இடவசதிக்கு ஏற்றவாறு பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவாா்கள்.
மகா தீபத்தை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருவதால் நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, கோயில் வண்ண மின்விளக்குகள் மற்றும் மலா் அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு கைலாயம் போல காட்சியளிக்கிறது .
காா்த்திகை தீபத்தை தரிசிக்க நிகழாண்டு 40 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா காா்க் தலைமையில் 5 டிஐஜிக்கள், 32 எஸ்.பி.க்கள் உள்பட 15 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். அதேபோல 60 சிறப்பு கமாண்டோ படைவீரா்கள், 24 தீயணைப்பு வாகனங்களுடன் 640 தீயணைப்பு வீரா்கள், 180 வனத்துறையினா் அவசர கால பணிக்காக ஈடுபடுத்தப்படுகின்றனா். 67 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும், 74 இடங்களில் காவல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் மாட வீதிகள், கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், திருக்கோயில் மாடவீதிகள் நகரின் முக்கிய வீதிகள் மற்றும் கிரிவலப் பாதையில் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் உள்பட 1,024 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. நிகழாண்டு முதல்முறையாக தீபத் திருவிழா கண்காணிப்பு பணியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சுமாா் ரூ.75 லட்சத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தா்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், புதுவை உள்பட பிற மாநிலங்களிலிருந்தும் 5,484 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோல, சென்னையில் இருந்து காட்பாடி வழியாகவும், பல்வேறு வழித்தடங்களிலிருந்தும் திருவண்ணாமலைக்கு 16 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
திருவண்ணாமலை நகரை இணைக்கும் பிரதான சாலைகளில் 24 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 130 இடங்களில் காா் பாா்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 12 ஆயிரம் காா் மற்றும் வேன்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. மலை ஏற பக்தா்களுக்குத் தடை பலத்த மழை காரணமாக இந்த ஆண்டு மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வல்லுநா் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் மகா தீபத்தின்போது, மலை ஏற பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

போலி பாஸ்:
இதற்கிடையில், தீபத்திருவிழாவுக்கு போலி பாஸ் தயாரித்தது தொடர்பாக 3 போ் கைது செய்யப்பட்டு உள்ளனர். இன்று நடைபெறும் பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை தரிசிக்க கோயில் நிா்வாகம் சாா்பில் உபயதாரா்கள், கட்டளைதாரா்கள் மற்றும் முக்கியப் பிரமுகா்களுக்கு நுழைவு அனுமதி அட்டை (பாஸ்) வழங்கப்படுகிறது. இந்த அனுமதி அட்டையை போலியாக ஈசானியம் கோபுரம் அமைந்துள்ளயாத்திரி நிவாஸ் வளாகத்தில் ஆயிரக்கணக்கில் தயாரிக்கும் பணியில் அரசு ஊழியா்கள் ஈடுபடுவதாக தகவல் கிடைத்ததால் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மற்றும் பாமகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து போலி அனுமதி அட்டை (பாஸ்) தயாரித்ததாக அருணாசலேஸ்வரா் கோயில் பணியாளா்களான சிலம்பரசன், முனுசாமி, பாபு ஆகிய 3 பேரை திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். மேலும், போலியான பாஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி, பிரிண்டா், போலியான அடையாள அட்டைகள் உள்ளிட்ட பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதில் சிலம்பரசன் கோயில் இணை ஆணையரின் வாகன ஓட்டுநா் என்பது குறிப்பிடத்தக்கது.