சென்னை: டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை கோட்டையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கடந்த ஒரு வாரமாக டிட்வா புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. குறிப்பாக கடற்கரை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டியது. தற்போது வரை சென்னை உள்பட பல பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள், பயிர் சேதம் குறித்தும், மற்ற மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.