டெல்லி: சளி, காய்ச்சலல் போன்ற முக்கிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்பட  211 மருந்துகள் தரமற்றவை.. மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வில் அதிர்ச்சி தகவல்  வெளியாகி உள்ளது. மேலும்,  5 மருந்துகள் போலியானவை என்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் போலியான பொருட்கள் தயாரிப்புகள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இதுபோன்ற போலி பொருட்கள், மக்களின் உயிரை காப்பாற்றும் மருந்துகளிலும் கோலோச்சி இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் சென்னையில் தயாரிக்கப்பட்ட  ‘கோல்ட்ரிஃப்’ சிரப் குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மருத்து தயாரிப்பு நிறுவனங்களில்  மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் அதிரடி ஆய்வுகள் மேந்கொண்டு வந்தனர்.

அதன்படி, நாடு முழுவதும்  மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வுகளில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரைகள், சிரப், ஊசிகள் உள்ளிட்ட மருந்துகள் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்களின் மூலம் தொடர்ச்சியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்த ஆய்வைத் தொடர்ந்து, தரம் குறைந்தது அல்லது போலியானது என்று கண்டறியப்படும் மருந்துகள் உடனடியாக சந்தையிலிருந்து திரும்ப பெறப்படுகின்றன. அதற்குப் பொறுப்பான நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

அதன்படி சமீபத்தில் மேற்கொண்டு ஆய்வுகளில், காய்ச்சல், சளி, கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் மொத்தம் 211 மருந்துகள் தரமற்றவையாகவும், 5 மருந்துகள் போலியானவையாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  காய்ச்சல் மற்றும் சளித் தொற்று நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், கிருமி தொற்றுக்கு எதிரான மருந்துகள், ஜீரண கோளாறுகளுக்கான மருந்துகள் உள்ளிட்டவை முக்கியமாக பரிசோதிக்கப்பட்டன. அந்த ஆய்வின் முடிவில் 211 மருந்துகள் தரமற்றவை என்றும், மேலும் 5 மருந்துகள் முற்றிலும் போலியானவை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான முழு விவரங்களும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cdsco.gov.in/தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’ என்ற மருந்தை உட்கொண்ட 11 குழந்தைகள், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘கோல்ட்ரிஃப்’ இரும்பல் சிரப் மருந்து தமிழகத்தில் உள்ள காஞ்சிபுர மாவட்டத்தில் ஸ்ரீசன் பார்மா எனும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. விசாரணையில் தெரியவந்தது. குழந்தைகள் உயிரிழப்பு காரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் மருந்து நிறுவனங்களில் ஆய்வு மெற்கொண்டது.

இதில், மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில், காய்ச்சல் மற்றும் சளி பிரச்சினைகளுக்கான 211 மருந்துகள் தரமற்றவை என்றும், மேலும் 5 மருந்துகள் போலியானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.ஆனால், அந்த மருந்து உற்பத்தி நிறுவனத்தில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் குறித்தோ, அந்த மருந்து தரமற்றது என வகைப்படுத்தப்பட்ட விவரத்தையோ தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறையினர் மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்திற்கு முறையாக தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் விளைவாக, தரமற்ற மருந்துகளின் விவரங்களை உரிய நேரத்தில் வழங்காத மாநிலங்களின் பட்டியலில் இந்த மாதம் தமிழகத்தின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மருந்து பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே கவலை அதிகரித்துள்ளது. இனிவரும் காலங்களில் ஆய்வு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.