சென்னை: கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட நிகழ்வு மனிததன்மையற்ற செயல் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

 கோவை விமான நிலையத்தின் பின்புறம்  சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 நபர்கள், ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிப்புக்குள்ளான அம்மாணவி, காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் என்ற மூன்று பேரையும் தனிப்படை போலீசார் நள்ளிரவில், அவர்களின் காலில் சுட்டுப் பிடித்தனர்.  ஆகிய 3 பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்!”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.