சென்னை: சபரிமலைஅய்யப்பன் கோவில், மண்டல பூஜை – மகரவிளக்கு பூஜை  சீசனுக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் , மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவுக்கு, தமிழகத்தில் இருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, முக்கிய நகரங்களிலிருந்து சிறப்பு ரயில்கள்  ஆண்டுதோறும் இயக்கப்பட்டுவது வழக்கம். இந்தாண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,  சென்னை – கொல்லம் இடையே 5 சிறப்பு ரயில்கள் இயக்கம் செய்யப்பட உள்ளது

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சபரிமலை சீசனில் பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை தவிர்க்க , பின்வரும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்:

சென்னை எழும்பூர்-கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்:06111) வருகிற நவம்பர் 14 முதல் ஜனவரி 16 வரை (வெள்ளிக் கிழமைகளில்) இரவு 11.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்,

மறுமார்க்கத்தில், கொல்லம் – சென்னை எழுப்பூர் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06112) வருகிற நவம்பர் 15 முதல் ஜனவரி 17 வரை (சனிக்கிழமைகளில்) மாலை 4.35 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12 மணிக்கு சென்னை எழுப்பூர் வந்து சேரும்.

சென்னை சென்ட்ரல் – கொல்லம்செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06113) வருகிற நவம்பர் 16 முதல் ஜனவரி 18 வரை (ஞாயிற்றுக்கிழமைகளில்) இரவு 11.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு சென்னை எழுப்பூர் வந்து சேரும்.

மறுமார்க்கத்தில், கொல்லம் – சென்னை சென்ட்ரல் செல்லும் வராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06114) வருகிற நவம்பர் 17 முதல் ஜனவரி 19 வரை (திங்கட்கிழமைகளில்) மாலை 4.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

சென்னை சென்ட்ரல் – கொல்லம்செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06117) வருகிற நவம்பர் 22 முதல் ஜனவரி 24 வரை (சனிக்கிழமைகளில்) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், கொல்லம் – சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06118) வருகிற நவம்பர் 23 முதல் ஜனவரி 25 வரை (ஞாயிற்றுக்கிழமைகளில்) மாலை 4.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

சென்னை சென்ட்ரல் – கொல்லம்செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06127) வருகிற நவம்பர் 20 முதல் ஜனவரி 22 வரை (வியாழக்கிழமைகளில்) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், கொல்லம் – சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06128) வருகிற நவம்பர் 21 முதல் ஜனவரி 23 வரை (வெள்ளிக்கிழமைகளில்) மாலை 4.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

சென்னை சென்ட்ரல் – கொல்லம்செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06127) வருகிற நவம்பர் 20 முதல் ஜனவரி 22 வரை (வியாழக்கிழமைகளில்) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், கொல்லம் – சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06128) வருகிற நவம்பர் 21 முதல் ஜனவரி 23 வரை (வெள்ளிக்கிழமைகளில்) மாலை 4.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த வாராந்திர சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை மறுநாள் (04.11.2025) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://patrikai.com/accident-insurance-up-to-rs-5-lakh-sabarimala-pilgrim-season-virtual-queue-booking-started-from-today-november-1/