சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. பின்னர் தமிழ்நாடு அரசு மற்றும் மத்தியஅரசு தலையிட்டு, மீனவர்கள் அபராதங்களுடன் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களின் படகுகளை இலங்கை அரசு விடுவிக்க மறுத்து வருகிறது.
இந்த நிலையில், நடைபெற்று வருகிறது. இன்றும் மீண்டும் இது போல ஒரு சம்பவம் நடந்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைதான செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.