சென்னை: தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம் என நவம்பர் 1ந்தேதி தமிழ்நாடு தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று (நவம்பர் 1) தமிழ்நாடு நாளையொட்டி, போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும் என அப்போதே காட்டிச் சென்றுள்ள நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்த குமரித் தந்தை மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., முதலிய எண்ணற்ற போராளிகளுக்கு எல்லைப்போராட்டத் தியாகிகள் நாளில் என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும் என அப்போதே காட்டிச் சென்றுள்ள நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்! தமிழ்நாடு போராடும்… தமிழ்நாடு வெல்லும்…!
இவ்வாறு கூறி உள்ளார்.
மக்கள் விரோத திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்! தமிழ்நாடு நாளையொட்டி விஜய் வாழ்த்து…
https://patrikai.com/let-us-pledge-to-form-a-government-that-can-restore-and-protect-lost-rights-anbumani-greetings-to-tamil-nadu-day/