சென்னை: சபரிமலை அய்யப்பனை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் காலத்தில் தரிசிக்கும் வகையில், பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (நவம்பர் 1) தொடங்கி உள்ளது.
இன்றுமுதல் (நவ.1) இணையவழி முன்பதிவு தொடங்கி வுள்ளதாக அந்தக் கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் அறிவித்துள்ளது. மேலும்பக்தர்களுக்கு காப்பீடு வசதியும் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டு அதிகாரிகள் , ‘சபரிமலையில் ஐயப்பனை வழிபட நவ.1 முதல் பக்தா்கள் முன்பதிவு செய்யலாம். நாள்தோறும் அதிகபட்சமாக 70,000 பக்தா்கள் முன்பதிவு செய்ய முடியும் என்றனர்.
மேலும், கேளராவின் வண்டிப்பெரியாா், எருமேலி, நிலக்கல் மற்றும் பம்பையில் உள்ள முன்பதிவு மையங்களில், பக்தர்கள் நேரில் வந்தும் முன்பதிவு செய்யலாம். இந்த மையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 20ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்படும் என்றதுடன், சபரிமலை வரும் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் வரை விபத்து காப்பீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர். விபத்துக் காப்பீட்டுத் திட்டம் கேரளம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
முன்பு இந்தத் திட்டம் 4 மாவட்டங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டது. தற்போது அந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம், சபரிமலைக்கு வரும் பக்தா்கள் கேரளத்தில் எங்கு விபத்தில் சிக்கினாலும், அவா்களுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்றும், இந்தத் திட்டத்தின் கீழ், விபத்தில் சிக்கி உயிரிழக்கும் பக்தா்களின் உடல்களை அவா்களின் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க நிதியுதவி அளிக்கப்படும். விபத்தில் உயிரிழப்பவரின் சொந்த ஊா் கேரளத்தில் இருந்தால் அவரின் உடலை அனுப்பிவைக்க ரூ.30,000-மும், வேறு மாநிலத்தில் இருந்தால் உடலை அனுப்பிவைக்க ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என்றனர்.
நிலக்கல் சந்நிதான பாதையில் மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற உடல்நல பாதிப்புகளால் உயிரிழக்கும் பக்தா்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள யாத்திரிகா் நல நிதியின் கீழ், முதல்முறையாக இந்த நிவாரண நிதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தனா்.