சென்னை: சபரிமலையில் நடைபெறும் புகழ்பெற்ற மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க செல்வதால், பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு பேருநது சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவதாக அறிவித்துஉள்ளது.
கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஐப்பசி மாதம் நடைபெற்று வருகிறது. இது முடிந்ததும், கார்த்திகை மாதம் 1ஆம் தேதி அடுத்த மாதம் 17ஆம் தேதி தொடங்குகிறது. அன்றுமுதல் அய்யப்பனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து இருமுடி கட்டிச் சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதன்படி, . மண்டல பூஜை, மகர விளக்கை முன்னிட்டு அய்யப்பனை சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து பம்பைக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நவம்பர் 16ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி இரண்டு மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இடையில், டிசம்பர் 27 முதல் 30 வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுவதால் அன்றைய தினங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டும் 15.11.2024 முதல் 16.01.2025 வரையில் சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி / கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் (Ultra Deluxe) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (NSS) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
(சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2024 முதல் 30.12.2024 மாலை 5.00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2024 முதல் 29.12.2024 வரை இச்சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது.)
இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றினை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும்.
மேலும், 60 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு Online மூலமாக, www.tnstc.in மற்றும் TNSTC Official app ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014452 9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.