சென்னை:  ’வருண்குமார் ஐ.பி.எஸ் மன நல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டது’  என்றும்,  விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அவர்  அதிகாரியாக இருக்க தகுதியற்றவர் என சீமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

திருச்சியில் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தபோது மிகவும் பிரபலமானவர் வருண்குமார். பின்னர் பதவி உயர்வு பெற்று   திருச்சி சரக டிஐஜி ஆக பணியாற்றி வந்தார். இவரை ஆகஸ்டு மாதம் தமிழ்நாடு அரசு, சென்னையில் சிபிசிஐடி பிரிவின் டிஐஜி ஆகிய நியமனம் செய்தது. தற்போது அவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில்,  உயர்நீதிமன்றத்தில் சீமான்  தாக்கல் செய்துள்ள பதில் மனுவில்,  ’வருண்குமார் ஐ.பி.எஸ் மன நல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டது’,  நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்க தகுதியற்றவர் என காட்டமாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, வருண்குமார் ஐபிஎஸ், சீமான் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் தீவிரமடைந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் நேரடியாக மோதிக்கொள்ளலாம் என சீமான் சவால் விடுத்திருந்தார். அதுபோல நீ என்ன பெரிய அப்பாடக்கரா என்றும் வருண்குமாரை சீண்டி இருந்தார்.

இதற்கிடையில்,  வருண்குமார் ஐபிஎஸ்,   தமக்கு எதிராக ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளைத் தெரிவிக்கச் சீமானுக்குத் தடை விதிக்கக் கோரியும், ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடு கோரியும்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

‘இது தொடர்​பாக வருண்​கு​மார் தொடர்ந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், அவருக்கு எதி​ராக அவதூறு கருத்​துகளை தெரிவிக்​கக்​கூ​டாது என சீமானுக்கு இடைக்​காலத் தடை விதித்து உத்​தர​விட்​டுள்​ளது.

இதற்கிடையில்,  சீமானுக்கு எதி​ராக ரூ.2.10 கோடி மான நஷ்டஈடு கோரி வருண்​கு​மார் தொடர்ந்த வழக்​கு, உயர் நீதி​மன்​றத்​தில் நீதிபதி பி.தன​பால் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது சீமான் தரப்​பில் வழக்​கறிஞர் எஸ்​.சங்​கர் ஆஜராகி பதில் மனுவை தாக்​கல் செய்​தார். அதில்,  ஐபிஎஸ் அதிகாரி​யான வருண்கு​மார் எனக்கு எதி​ராக தெரி​வித்​துள்ள புகார்​கள் உண்​மைக்கு புறம்​பானவை. அவரது வழக்கு விசா​ரணைக்கு உகந்​தது அல்ல.

டெல்​லி​யில் ஐபிஎஸ் அதி​காரி​யாக பயிற்​சி​யி்ல் இருந்​த​போது பிரியதர்​ஷினி என்​பவருக்​கும் அவருக்​கும் பழக்​கம் ஏற்​பட்​டது. ஆனால் அவரை திரு​மணம் செய்து கொள்ள அளவுக்கு அதி​க​மாக வரதட்​சணை கேட்​ட​தாக எழுந்த புகாரின்​பேரில் வருண்​கு​மாருக்கு எதி​ராக வரதட்​சணை தடுப்பு சட்​டத்​தின்​கீழ் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்டு அவர் நீதி​மன்ற காவலில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

அதன்​பிறகு அவர் ராம​நாத​புரம் எஸ்​பி​யாக பணி​யாற்​றிய​போது டிவிட்​டரில் தனது சொந்த கருத்​துகளை பதி​விட்​டதற்​காக பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டார். அவரின் நடத்​தை களுக்கு இந்த சம்​பவங்​களே சாட்​சி.

வருண்​கு​மார் குறித்​தும், அவரது குடும்​பம் குறித்​தும் தனிப்​பட்ட முறை​யில் எந்த கருத்​தை​யும் தெரிவிக்​க​வில்​லை. எனது கட்சி நிர்​வாகி​யான சாட்டை துரை​முரு​கன் மீது பழி​வாங்​கும் நோக்​கில் வழக்​கு​களை பதிவு செய்​தார் என்​ப​தற்​காக, ஒரு காவல்​துறை அதி​காரி​யாக அவரது செயல்​பாடு​கள் குறித்து மட்​டுமே விமர்​சிக்​கப்​பட்​டது.

தனிப்​பட்ட எனது அரசி​யல் ஆதா​யத்​துக்​காக யாரை​யும் விமர்​சித்​தது கிடை​யாது.

ஆனால் ஐபிஎஸ் அதி​காரி​யான வருண்​கு​மார் ஆளுங்​கட்​சிக்கு ஆதர​வாக செயல்​படு​வ​தாக நினைத்​துக்​கொண்டு என்​னை​யும், கட்சி நிர்​வாகிளை​யும் தொடர்ந்து அவதூறாக விமர்​சித்து வரு​கிறார்.

நியாய​மான இந்த விமர்​சனங்​களை அவரால் தாங்​கிக்​கொள்ள முடிய​வில்லை என்​றால் அவர் ஐபிஎஸ் அதி​காரி​யாக பதவி வகி்க்​கவே தகு​தி​ய​வற்​றவர். அவருக்கு உளவியல் ரீதி​யாக ஆலோ​சனை தேவைப்​படும் நேரம் இது.

எனவே, எனக்கு எதி​ரான இந்த வழக்கை தள்​ளு​படி செய்ய வேண்​டும்.

இவ்​வாறு பதில் மனு​வில் கோரி​யுள்​ளார்.

இந்த மனுமீதான அடுத்த  விசாரணை  நவ.11ந்தேதி நடைபெற உள்ளது.

தொடரும் மோதல்: ‘நீ அவ்வளவு பெரிய அப்பா டக்கரா?’ என வருண்குமார் ஐபிஎஸ்-ஐ நார் நாராய் கிழித்த சீமான்…

அரசியல் கட்சி தலைவர்போல அட்ராசிட்டி: காவல்துறை அதிகாரி வருண்குமார் – சீமான் மோதல் உச்சக்கட்டம்

https://patrikai.com/ntk-leader-seeman-cornered-by-dmk-government-cases-filed-in-succession-will-he-be-arrested-soon-62-cases-filed-in-last-three-days/