சென்னை: தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை விலையில்லா உணவு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தூய்மை பணிகளை தனியார் மாக்குவதை கண்டித்து சுமார் 100 நாட்கள் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஆதரவாக போராடிய சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்களும் சிலரும் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவ்வப்போது திடீர் திடீரென போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்கு மூன்று வேலையும் இலவச உணவு வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 15 மண்டலங்களில், 11 மண்டலங்களில் பணி தனியாரிடம் இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மீதம் இருக்கும் ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க கடந்த ஜூன் மாதம், மாநகராட்சி ஒப்புதல் அளித்தது. அந்த மண்டலங்களில், மொத்தம் 2,039 தூய்மை பணியாளர்கள் பணியாற்றினர். தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தாலும் கூட, அவர்களுக்கான பணி வழங்கப்பட்டது. ஆனால் ஊதியம் குறைவு, பணி நிரந்தரம் காரணங்கள் கூறி, இந்த பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கக்கூடாது என துாய்மை பணியாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதனை அடுத்து, அவர்களுக்கு மூன்று வேலையும் விலையில்லா உணவு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தூய்மை பணியாளர்களை சந்தோஷப்படுத்தும் வகையில், அவர்களுக்கு விலையில்லா மூன்று வேலை உணவு வது வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், “தூய்மை பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவை சமைப்பதற்கும், அதை எடுத்து வந்து உண்பதற்கும் பல்வேறு பிரச்சனைகள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்படும். இத்திட்டம் முதல் கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
..
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவிப்பின் படி, இன்று அரசாணை வெளியிப்பட்டுள்ளது. அதன்படி காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் உணவு தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட உள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய, வடக்கு மற்றும் தெற்கு வட்டார பகுதிகளில் பணிபுரியும் மொத்தம் 29,455 பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்ட இடங்களின் உணவு வழங்கப்படும். காலை 5:30 மணி முதல் 6:00 மணி வரையில், 166 இடங்களில் 5,159 எண்ணிக்கையில் உணவு வழங்கப்பட உள்ளது. மதிய உணவானது 1:30 மணி முதல் 2:00 மணி வரையிலும் 285 இடங்களின் 22,886 எண்ணிக்கையிலான உணவு வழங்கப்பட உள்ளது.
மேலும் இரவு உணவு 9:30 முதல் 10:00 மணி வரையிலும் வழங்கப்படும். இரவு உணவு 1410 நபர்களுக்கு வழங்கப்படும். இந்த உணவுகள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு வழங்கபட உள்ளது. இதற்காக 186 கோடியே 94 லட்சத்தி 22969 ரூபாய் செலவிடபட உள்ளது
. தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் தொடர்பான திட்டதை கண்காணிக்க திட்ட மேலாண்மை ஆலோசகர் சென்னை மாநகராட்சியால் நியமனம் செய்யப்பட உள்ளார்.