தஞ்சாவூர்:  தஞ்சை அருகே உள்ள  நேரடி கொள்முதல் நிலையம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகள் தங்களது வேதனைகளை தெரிவித்தனர். இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, நெல்மணிகளை கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் உள்ளது” என்றார்.

முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் பேசிய  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக குற்றம்சாட்டினார்.  “விவசாயிகளிடம் இருந்து ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட 15 லட்சம் நெல் மூட்டைகள் திருவாரூரில் கிடங்கில் உள்ளது. இதனால் 15 லட்சம் நெல் மூட்டைகளை குடோனுக்கு கொண்டு சென்ற பின் மீண்டும் நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை அடுக்கலாம். டெல்டா மாவட்டங்களில் தற்போது வரை போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் 600 மூட்டைகள் மட்டுமே நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் தினமும் 600 மூட்டைகளுக்கு பதிலாக 1,000 மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், தற்போது  பெயர் வரும் தொடர் பருவமழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி காணப்படும் நிலையில்,  தஞ்சாவூர் நெல் கொள்முதல் நிலையத்துக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பெய்து வரும் கனமழை   காவிரி டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து பெய்து வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மழை காரணமாக தஞ்சை மற்றும் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கடந்த சில நாட்களாக அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கி உள்ளன. ஒரு நாளைக்கு வெறும் சில நூறு மூட்டைகள் மட்டுமே எடைபோட்டு கொள்முதல் செய்யப்படுவதால், புதிய நெல் மூட்டைகள் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 10 முதல் 15 நாட்களாக விவசாயிகள் தங்கள் நெல்மணிகளை வெளியில் குவித்து காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.“

தஞ்சாவூர் மாவட்டதில் குறுவை அறுவடை பணிகள் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. பூதலூர் உள்ளிட்ட பல கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் வயல்களில் கதிரோடு சாய்ந்து கிடக்கின்றன. பூதலூர் கிராமத்தில் ஒரே இடத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி கிடப்பதோடு, முற்றிய நெல்மணிகள் முளைத்தும் காணப்படுகின்றன. இதனால் பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்த நெற் பயிரை முழுமையாக அறுவடை செய்ய இயலாத நிலையை எண்ணி விவசாயிகள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில் தஞ்சையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். காட்டூர் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேரில் சென்று அவர் ஆய்வு செய்தார். மழையில் முளைத்த நெல்மணிகளை எடுத்து பார்த்து ஆய்வு மேற்கொண்ட அவர், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

இதுகுறித்து விவசாயிகள் வேதனை தெரிவித்தபோது, எடப்பாடி பழனிசாமி நேரடியாக அந்த நிலையை பார்வையிட்டார். நெல்மணிகள் மழையால் முழைத்து, பழுது பட்டிருப்பதைப் பார்த்த அவர், இது விவசாயிகளின் வியர்வையை அழிக்கும் அரசு அலட்சியம்” என்று கடும் அதிருப்தி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி.  விவசாயிகள் 15 நாட்களுக்கு மேலாக தங்கள் நெல்மணிகளை கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு நாளும் குறைந்தது 2,000 மூட்டைகள் எடைபோட்டு கொள்முதல் செய்து இருந்தால் இப்போது எந்த நெல்மணியும் முளைக்காது இருந்திருக்கும். அரசு இதை செய்யவில்லை. அதுவே இன்றைய விவசாயிகள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினை.

அமைச்சர் சட்டமன்றத்தில் தவறான தகவலை கூறியுள்ளார். அவர் சொன்னபடி தினமும் 2,000 மூட்டைகள் எடைபோடப்பட்டிருந்தால் இன்றைக்கு இந்த மூட்டைகள் எல்லாம் லாரிகளில் ஏற்றி அனுப்பப்பட்டிருக்கும். ஆனால் அவை இங்கேயே தேங்கி முளைக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு முழுக்க முழுக்க அரசு அலட்சியமே காரணம் என்றார்.

தற்போது விவசாயிகள் மழையால் இரட்டிப்பு இழப்பைச் சந்திக்கின்றனர் – ஒரு புறம் சாகுபடி பாதிப்பு, மற்றொரு புறம் கொள்முதல் மந்தம். அரசு உடனடியாக கொள்முதல் வேகத்தை அதிகரிக்க வேண்டும். மேலும், முளைத்த நெல்மணிகளுக்கும் நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இது விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டம். இதை அரசு புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது என்று அவர் வலியுறுத்தினார்.

அவர் நேரடியாக நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கும் பகுதிகளில் சென்று ஆய்வு செய்தபோது, விவசாயிகள் தீபாவளி கொண்டாட முடியாத நிலை. நமது நெல் முழைய ஆரம்பிச்சுது” எனக் கண்கலங்கியபடி தெரிவித்தனர். இதனை பார்த்த எடப்பாடி, இந்த தீபாவளி விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளியாகி விட்டது” என உருக்கமாக கூறினார். அவரது விஜயத்துக்கு பின்னர் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்ததாவது, அரசு உடனடியாக நிவாரணம் மற்றும் விரைவு கொள்முதல் நடவடிக்கை எடுக்காவிட்டால் டெல்டா மாவட்டங்களில் பெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.