திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பின் போது திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப் படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். நாளை முதல் வரும் 22ந்தேதி வரை 5 நாடகள் நடை திறந்திருக்கும்.
அதன்படி நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறந்தது அபிஷேகத்திற்கு பின்னர் நெய் அபிஷேகம் தொடங்கும். 7:30 மணிக்கு உஷ பூஜை நிறைவு பெற்றதும் கார்த்திகை 1 முதல் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜை செய்வதற்கான மேல் சாந்தி தேர்வு நடைபெறுகிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்தவர் களின் பட்டியலில் உள்ள பெயர்களில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கிடையில், வரும் 22ந்தேதி அன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை அய்யப்பனை தரிசிக்க வருகை தர இருக்கிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.