சென்னை: அரசியல் கட்சிகளின் கூட்டங்களின்போது சாலையோரங்களில் தற்காலிகமாக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு கொடிக்கம்பம்  அமைக்க தலா ரூ.1000 வசூலிக்கலாமே  உயர்நீதிமன்றம் ஆலோசனை கூறி உள்ளது.

அதாவது, அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களின்போது, அந்த பகுதிகள் மூலம் சாலையோரங்களில் கட்சி கொடிக்கம்பங்கள் நடப்பட்டு வருகிறது. இது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதை அகற்ற பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறினாலும், அதை அரசியல் கட்சிகள் அகற்ற மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொடிக்கம்பங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, சாலை இளந்திரையன், சா லை ஓரங்களில் அரசியல் கட்சிகள் தற்காலிகமாகக் கொடிக்கம்பங்கள் வைக்க ஒரு கம்பத்துக்கு ஆயிரம் ரூபாய் வசூலிக்கும்படி, தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணையும், வழிகாட்டு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசியல் கட்சிகள்  அரசின் விதிகளை பின்பற்றியோ கொடிக்கம்பங்கள் அமைத்து வருகின்றனர் என்றார்.

ஆனால், அதை  ஏற்க மறுத்த நீதிபதி, அனுமதியின்றி கொடி கம்பங்கள் வைப்போருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் அரசு மற்றும் காவல்தறை  எடுக்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், சாலை ஓரங்களில் கொடி கம்பங்கள் வைக்க அனுமதி கேட்பவர்களிடம் ஒரு கொடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வசூலிக்க வேண்டும் என்றும் இது அரசுக்கு வருவாயை ஈட்டிக் கொடுக்கும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

கொடி கம்பங்கள் அமைப்பது தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என அனைத்து துறை தலைவர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, தலைமைச் செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

அனுமதியின்றி தற்காலிகமாகக் கொடிக்கம்பங்கள் வைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராகத் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 12 ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.