சென்னை: நாளை முதல் 4 நாள்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பபேரவை தலைவரான சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக். 14 ஆம் தேதி கூடும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, இன்று சபாநாயகர் தலைமையில், கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவினை சபாநாயகர் அப்பாவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதன்படி, “நாளை (அக்.14) சட்டப்பேரவை கூடுகிறது என்றவர், இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும் என்றார். கூட்டத்தொடரில், மறைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், ஜார்கண்ட் முதல்வராக இருந்த சிபு சோரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.
நாளை(அக். 14) மறைந்த எம்எல்ஏ அமுல் கந்தசாமிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
கரூர் கூட்ட நெரிசலில் இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்படும்.
இதையடுத்து, அக்டோபர் 15ந்தேதி அன்று கூடுதல் மானியக் கோரிக்கை முன்வைக்கப்படும். பேரவையில், 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களும் கேள்வி நேரம் உண்டு. இதற்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். அதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். அக். 17 ஆம் தேதி விவாதத்திற்கு முதல்வர் பதிலளிப்பார்” என்று தெரிவித்தார்.கூறியுள்ளார்.