கோவை: தமிழ்நாட்டின் மிக நீளமான முதல் அவிநாசி உயர்மட்ட ஜிடி நாயுடு மேம்பாலத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று திறந்து வைத்தார்.

கோவை அவிநாசி சாலையில் ரூ.10.1 கி.மீ. தூரத்திற்கு ரூ.1,791 கோடியில்  உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. கோவை கோல்ட்வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கி.மீ. தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது . இந்த  மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முன்னதாக இன்று காலை  சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட முதல்வர் ஸ்டாடிலன் காலை 9.30 மணிக்கு  கோவை விமான நிலையம்  சென்றார். அங்கு அவருக்கு கட்சியினர்  வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து கோவை  கொடிசியாவில் நடந்த  உலக புத்தொழில் மாநாமாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இதையடுத்து, காலை 11.30 அளவில்,  நெடுஞ்சாலைத்துறை சார்பில், அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் – கோல்டுவின்ஸ் வரையிலான 10.1 கி.மீ., நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை, கோல்டுவின்ஸ் பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். முதல்வர் வருகையை முன்னிட்டு அவிநாசி ரோட்டில் வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. மாநகரின் அனைத்து சோதனை சாவடிகளிலும், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து,   கோவை அரசு கலை கல்லுாரியில் நடக்கும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் விபத்தில்லா கோவைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில், தங்க நகை பூங்காவுக்கான அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து மதியம், 2:30 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

முதல்வர் வருகையை முன்னிட்டு, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தலைமையில், ஆறு துணை கமிஷனர்கள், 26 உதவி கமிஷனர்கள், 62 இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்,   பாதுகாப்பு பணிகளுக்காக ஐந்து மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.\

https://patrikai.com/chief-minister-stalin-to-visit-coimbatore-on-9th-october-traffic-changes-announced/