சென்னை: உடன்பிறப்பே வா என்ற கட்சி நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தென்காசி, விளாத்திகுளம்,  தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இன்னும் 6 மாதங்களே தேர்தலுக்கு உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,   ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் தி.மு.க. நிர்வாகிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வைத்து  சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த சந்திப்பின் போது  அவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கி வருகிறார்.  தொகுதி நிலவரம்,தொகுதி வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என கேட்டறிந்தார். பின்னர், தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக இன்று  ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் இன்று விளாத்திகுளம் மற்றும் தென்காசி தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார்.