சென்னை: மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்ககளின் பணி நேரத்தில் சலுகை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, மாற்றுத்திரறாளிகள் தினமும் மாலை நேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவகத்தை விட்டுச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உடல் பணியமைப்பு உடல் ஊனமுற்ற அரசுப் பணியாளர்கள் முன் அனுமதி ஊனமுற்ற அரசுப்பணியாளர்கள் தினமும் மாலை நேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவலகத்தை விட்டுச் செல்ல அனுமதி என ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,

  1. உடல் ஊனமுற்ற அரசுப்பணியாளர்கள், மாலை 5.45 மணிக்கு அலுவலகம் முடிந்து வீட்டிற்குத் திரும்பும் போது போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலில் பேருந்தில் பயணம் செய்து இல்லத்திற்கு செல்வதற்கு மிகவும் அல்லல்படுவதால் ஊனமுற்ற அரசுப்பணியாளர்கள் மாலையில் முன்னதாக அலுவலகம் விட்டு இல்லம் செல்ல அனுமதி வழங்குமாறு அரசை வேண்டிக் கொண்டனர்.
  2. இது தொடர்பாக ஊனமுற்றோருக்கான மாநில ஆணையரிடம் குறிப்புரை கேட்டபோது பார்வையற்றோர் மற்றும் உடல் ஊனமுற்ற பணியாளர்கள் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் முன்னதாகச் செல்ல அனுமதி வழங்கலாம் என பார்வையில் கண்டுள்ள கடிதத்தில் பரிந்துரை செய்துள்ளார்.
  3. ஊனமுற்றோருக்கான மாநில ஆணையரின் கருத்துருவை அரசு கருணையுடன் பரிசீலனை செய்தது. அதன் அடிப்படையில் பார்வையற்றோர் மற்றும் உடல் ஊனமுற்ற அரசுப் பணியாளர்கள் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்ல அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது.
  4. தலைமைச் செயலக அலுவலக நடைமுறை மற்றும் அரசு அலுவலக நடைமுறை நூல்களுக்கு தக்க திருத்தம் பின்னர் வெளியிடப்படும்.

ஊனமுற்ற அரசுப்பணியாளர்கள் குறித்த அரசாணை என்பது, அனைத்து தலைமைச் செயலகத் துறை, அனைத்து துறைச் செயலர்கள், அனைத்து துறைத் தலைவர்கள், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள்,  அனைத்து மாவட்ட நீதிபதிகள், உயர்நீதிமன்றம் பதிவாளர், ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர், சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை, தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செயலாளர் ஆகிய துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஊனமுற்ற அரசுப்பணியாளர்கள் அரசாணை நகல்:

அதேநேரத்தில் ஊனமுற்ற அரசுப்பணியாளர்கள் குறித்த அரசாணை  இந்த நகலை, “முதலமைச்சரின் செயலாளர், முதுநிலை நேர்முக உதவியாளர், அமைச்சர் (மின்சாரம்), முதுநிலை நேர்முக உதவியாளர், சமூகநலம் அமைச்சர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறையின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பிரிவுகள், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறைச் செயலரின் தனிச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த (பயிற்சி) துறை செயலரின் தனிச்செயலர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது”.