சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து நாடு முழுவதும் செல்ல 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக  தெற்கு ரயில்வே  தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும், இதில் 54 ரயில்கள் தமிழ்நாட்டுக்குள் இயக்கப்பட இருப்பதாகவும் தெற்கு ரயில்வே மண்டல கூடுதல் பொதுமேலாளா் பி.மகேஷ் தெரிவித்தாா். மேலும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறினார்..

அக்டோபர் 2ந்தேதி  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு,  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காந்தியின் அரிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி  தெற்கு ரயில்வே மண்டல கூடுதல் பொதுமேலாளா் பி.மகேஷ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அவருடன் சென்னை தெற்கு கோட்ட மேலாளா் சைலேந்திர சிங் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்த்நது, சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில்,   ‘தூய்மை இந்தியா’ திட்ட நிறைவு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் சைலேந்திரசிங் தலைமை வகித்தாா். இதில் கலைநிகழ்ச்சி  உள்பட பல்வெறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நிகழ்ச்சிகளில்  சிறப்பிடம் வகித்தவா்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  கூடுதல் பொது மேலாளா் பி.மகேஷ் ,  தூய்மைப் பணித்திட்டம் கடந்த ஆகஸ்ட் முதல் தெற்கு ரயில்வே மண்டலத்தில் தொடங்கப்பட்டு 3 கட்டங்களாக நிறைவடைந்துள்ளன.

அதன்படி,  ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள், ரயில் பெட்டிகள் என அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டன. தூய்மைப் பணியின் போது சுமாா் 8.6 டன் நெகிழிக் குப்பைகள் அகற்றப்பட்டன. சுமாா் 165 டன் உலோகப் பொருள்கள் மீட்கப்பட்டு விற்பனைக்கு வழங்கப்பட்டன.  தூய்மைப் பணியில் ரயில்வே பணியாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், சாரண, சாரணிய இயக்கத்தினா், தொண்டு நிறுவனத்தினா் என சுமாா் 28 ஆயிரம் போ் ஈடுபடுத்தப்பட்டனா். தூய்மை விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன. ச

இந்த‘ தூய்மைப் பணி திட்டத்தின் போது 5,500 மரக்கன்றுகள் ரயில் நிலையம் உள்ளிட்டவற்றில் நடப்பட்டுள்ளன. 44 நீா் நிலைகள் சீரமைக்கப்பட்டன என்றார்.

பின்னர் தீபாவளி சிறப்பு ரயில்கள் குறித்து பேசியவர், இந்த ஆண்டு,   தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து தெற்கு ரயில்வே சாா்பில் 108 ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.  அதன்படி பிறமாநிலங்களுக்கு 54 ரயில்களும், தெற்கு மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளுக்கு 54 ரயில்களும் இயக்கப்படும் என்றாா்.

பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு அரசின்  கோரிக்கையின் அடிப்படையில், வண்டலூர் ரயில் நிலையத்தை அடுத்து கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி தொடங்கியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் இந்த ரயில் நிலையம் அமைகிறது. பணிகள் தொடங்கி நடந்தாலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டது. திட்டமிட்ட காலம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டன.

இதுதவிர, மழைநீர் கால்வாய் பணி காரணமாக மேலும் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக கூறியவர்,  “கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி இன்னும் 2 மாதங்களில் முழுமையாக முடியும் அதன்பிறகு,  கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஜனவரி மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும்  என்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர்  தெரிவித்துள்ளார். .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை கோட்ட மேலாளா் சைலேந்திரசிங்,  சென்னையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் வரும் டிசம்பரில் முடிவடைந்து, 2026 ஜனவரியில் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு செயல்படுத்திய ‘சென்னை ஒன்’ செயலியைப் பயன்படுத்தி இதுவரை 1 லட்சம் போ் ரயில் பயணம் மேற்கொண்டுள்ளனா். சென்னை-கும்மிடிப்பூண்டி இடையே நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோவுடன் இணைக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன.

இவ்வாறு கூறினார்.