டெல்லி: ​முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான கடந்த 2011-ம் ஆண்டைய தேர்தல் வழக்கின் விசாரணையை  உச்சநீதிமன்றம் நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைத்தது. இது சமூக வலைதளங்களில் பேசும்பொருளாக மாறி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் 2011க்கு பிறகு 2016 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், 2021ல் மீண்டும் வெற்றிபெற்று, தற்போது தமிழக முதலமைச்சராக இருந்து வருகிறார். ஆனால், அவர்மீதான 2011 தேர்தல் வழக்கில் இன்னும் தீர்வு எட்டப்படாமல் இருப்பது நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி வருகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்,  கொளத்​தூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட தற்​போதைய முதல்வரும், அப்​போதைய திமுக பொருளாள​ருமான ஸ்டா​லினை எதிர்த்து அதி​முக சார்​பில் சைதை துரை​சாமி போட்​டி​யிட்டார். அந்த தேர்தலில் ஸ்டா​லின் வெற்றி பெற்​றார்.  கொளத்​தூர் தொகு​தி​யில்  நடை​பெற்ற தேர்​தலில் மு.க.ஸ்​டா​லின் வெற்றி பெற்​றது செல்​லாது என அறி​விக்​கக் கோரியும், தேர்தலின்போது,  அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி இந்த வெற்றியை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் சைதை துரை​சாமி வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

.இந்த வழக்கு விசா​ரணை நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்​கிய அமர்​வில்  விசாரணைக்கு வந்தது.  து. அப்​போது சைதை துரை​சாமி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் டி.எஸ். நாயுடு, ‘‘நீண்ட இடைவெளிக்​குப் பிறகு இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​துள்​ளது. அடுத்த விசா​ரணைக்​கான தேதியை வழங்​கி​னால் எழுத்​துப்​பூர்​வ​மான வாதங்​களைத் தாக்​கல் செய்ய ஏது​வாக இருக்​கும்’’ எனக்​கூறி விசா​ரணையை தள்ளி வைக்​கக் கோரி​னார்.

அப்​போது தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் பிரதீக் குமார், ‘‘வாக்கு இயந்​திரங்​களை பாது​காப்​பாக வைத்​திருப்​பது சவாலான காரிய​மாக உள்​ளது. வாக்கு இயந்​திரங்​கள் வைக்​கப்​பட்​டுள்ள அறைக்கு 24 மணி நேர​மும் போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. பாது​காப்பு அறை​யின் ஒருபக்க சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்​துள்​ளது. எனவே இந்த வழக்கை விரைந்து விசா​ரிக்க வேண்​டும்’’ என்​றார்.

அதையேற்க மறுத்த நீதிப​தி​கள், 2 மாதங்​களில் ஒன்​றும் நடந்து வி​டாது எனக் கூறி வழக்கு வி​சா​ரணையை நவம்​பர் முதல்​வாரத்​துக்​கு தள்​ளி​வைத்து உள்​ளனர்​.