சென்னை: வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு  வழங்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி  டிச. 5-ந்தேதி மாநிலம் முழுவதும் பாமக போராட்டம் நடைபெறும் என அக்கட்சி நிறுவனர் டாக்டர்  ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 வன்​னியர் சங்க நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் நடை​பெற்​றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து  பாமக நிறு​வனர் ராம​தாஸ், செய்​தி​யாளர்​களிடம் கூறனார். அப்போது,   வன்​னியர்​களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்​கீடு வழங்​கக் கோரி டிசம்​பர் முதல் வாரத்​தில் வன்​னியர் சங்​கம் சார்​பில் மாவட்​ட தலை நகரங்​களில் போராட்​டம் நடத்​தப்​படும். இதில் 30 வயதுக்கு கீழே உள்ள மாணவ, மாணவி​கள், இளைஞர்​கள் பங்​கேற்​பார்​கள். 30 வயதுக்கு மேலே உள்​ளவர்​கள் போராட்​டம் நடத்த உதவி செய்​வார்​கள் என தெரிவித்திருந்தார். மேலும்,  போராட்​டத்தை வடிவ​மைக்க கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி தலை​மை​யில் 7 பேர் அடங்கிய குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது டிசம்பர் 5ந்தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடுகோரி போராட்டம் நடைபெறும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு கோரி மாநிலம் முழுவதும் வருகிற டிசம்பர் 5-ந்தேதி போராட்டம் நடத்தப்படும். டிச.5-ந்தேதி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அறவழி தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

வன்னியருக்கு 15% இட ஒதுக்கீடு கோரி பா.ம.க. தலைவர் அன்புமணி டிச.17-ந்தேதி சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்த நிலையில் ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.