திருச்சி: ‘சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய்க் கிரகத்தில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

திருச்சியில் நடைபெற்ற தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய்க் கிரகத்தில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவித்தார்.

கல்வியை தாய்மொழியில்தான் சிறப்பாக கற்க முடியும். அதேவேளையில், ஆங்கில மொழியை கற்றுக் கொள்வதன் மூலம் உலக அளவில் நாம் செல்லமுடியும். உலக அளவில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.  தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களை பட்டதாரிகளாக நாட்டுக்கு மட்டுமின்றி உலகத்திற்கானவர்களாகக் கல்வி மூலம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்றவர்,  உலக அளவில் இருக்கும் பல்வேறு வாய்ப்புகளைக் கல்வியின் மூலம் அடைய முடியும் என்பதை, தன்னையே உதாரணமாகக் கொண்டு மாணவர்களுக்கு எடுத்துரைத்து  வருகிறேன் என்றார்.

பழைய காலத்திலும் அறிவியல் இருந்தது. இன்றும் உள்ளது. ஆனால், அறிவியல் இன்று பல வகைகளில் மேம்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு விண்வெளித் துறையில் முக்கியமானது. விண்வெளித் துறையில் ஏற்கெனவே அது செயல்படுத்தப்பட்டு அடுத்த பரிமாணத்தை நோக்கிச் சென்றுள்ளது.

சமுதாயத்துக்கான பல்வேறு பணிகளை இந்திய விண்வெளித் துறை செய்துள்ளது. சூரிய மண்டலத்தில் பூமிக்கு அடுத்து மனிதர்கள் வாழத் தகுதியான கிரகமாக செவ்வாய்க் கிரகம் இருக்க வாய்ப்புள்ளது ஆவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. . எனவே, சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய்க் கிரகத்தில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

விண்வெளித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்துப் பேசிய அவர், பழைய காலத்திலும் அறிவியல் இருந்தது, இன்றும் உள்ளது; ஆனால் அறிவியல் இன்று பல வகைகளில் மேம்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் கே.என். நேரு உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.