டெல்லி: இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை மத்தியஅரசு அக்டோபர் 24 வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டு உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய அரசு தடை விதித்த நிலையில், தற்போது, அதை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்துள்ளது.

2025ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நடந்த பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த கோர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் இந்திய அரசு, ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில், பயங்கரவாதிகளை வேட்டையாடியதுடன், பாகிஸ்தானுக்குள் புகுந்தும் விமான நிலையங்களை நொறுக்கி சேதப்படுத்தியது.
இதற்கிடையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சிந்துநதி நீர் நிறுத்தம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததது. அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 30 முதல் இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம், பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்கள், ராணுவ விமானங்கள் உட்பட சொந்த அல்லது குத்தகைக்கு எடுத்த விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.
விமானம் இந்திய வான்வெளியில் பறப்பதற்கான தடை முதலில், மே 24-ம் தேதி வரை விதிக்கப்பட்ட நிலையில், பின்னர், அது செப்டம்பர் 24ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது அக்டோபர் 24 வரை தடை நீட்டிப்பு செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.