சென்னை: தூத்துக்குடியில் இரண்டு கப்பல்கட்டும் தளம் அமைய இருப்பதாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இதன்மூலம்  55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாற்றை! இப்போது, தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன. தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் புதியதொரு அடித்தளமாக இவை அமையும்!” என்று குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடியில் இரு கப்பல் கட்டும் தளங்கள் தமிழகத்தில் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்களை நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் சிப்காட் நிர்வாகமும் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகமும் சில வாரங்களுக்கு முன்பு கையொப்பமிட்டன. இதன் மூலம் ரூ.30,000 கோடி முதலீடு செய்யப்பட்டு 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளதாக, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “கொச்சி ஷிப்யார்ட் நிறுவனம், உலக அளவிலான வணிகக் கப்பல் கட்டும் தளத்தை நிறுவ ரூ.15,000 கோடியை முதலீடு செய்யும். முதல்கட்டமாக 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் (4,000 நேரடி மற்றும் 6,000 மறைமுக) உருவாக்கப்படும். மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனமானது, ரூ.15,000 கோடி முதலீட்டில் மற்றொரு உலகளாவிய வணிகக் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கிறது. இது 45,000-க்கும் மேற்பட்டோருக்கு (5,000 நேரடி மற்றும் 40,000 மறைமுக) வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய நகர்வாக இருக்கும். இந்த இரண்டு மிகப்பெரிய திட்டங்களும் சேர்ந்து, கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக தமிழகம் உருவெடுக்க வழிவகுக்கும்” என்று டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுக ஆட்​சி​யில் தொழில்​துறை வரலாறு காணாத வளர்​ச்சிகண்​டுள்​ளது. பல தொழில்​பிரிவு​கள், குறிப்​பாக எலெக்ட்​ரானிக்​ஸ், வாகன உதிரி​பாகங்​கள், காலணி தயாரிப்பு போன்ற தொழில் பிரிவு​களில் தமிழகம் முதலிடத்​தில் உள்​ளது.

முதல்​வரை பொறுத்​தவரை, பாரம்​பரிய துறை​கள் மற்​றும் புதிய துறை​களில் நாம் கால்​ப​திக்க வேண்​டும், வளர்ச்சி காண வேண்​டும் என்று உத்​தர​விட்​டுள்​ளார். இதற்​கிணங்க வெளி​நாட்டு பயணங்​கள், இங்கு நடை​பெறும் முதலீட்​டாளர்​கள் மாநாடு​களில் செமிகண்​டக்​டர் போன்ற புதிய தொழில் பிரிவு​கள் மற்​றும் கப்​பல் கட்​டும் துறை​யில் அதி​ முக்​கி​யத்​து​வம் இருப்​பதை அறிந்​துள்​ளோம். நாம் கப்​பல் கட்​டும் துறை​யில் நீண்ட கால​மாக உள்​ளோம்.

இதன் வாயி​லாக, தற்​போது தமிழ்​நாடு தொழில் வழி​காட்டி நிறு​வனம் மற்​றும் சிஎஸ்​எல் எனப்​படும் கொச்​சின் ஷிப்​யார்டு லிட் நிறு​வனம் இடை​யில் ரூ.15 ஆயிரம் கோடிக்​கான முதலீட்டு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி​யுள்​ளது. அதே​போல், மசகான் டாக் ஷிப் பில்​டர்ஸ் நிறு​வனத்​துட​னும் ரூ.15 ஆயிரம் கோடிக்​கான ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது.

தூத்​துக்​குடி​யில் அமை​யும் இந்த கப்​பல் கட்​டும் தளங்​களில் சிஎஸ்​எல் நிறு​வனத்​தில் 4 ஆயிரம் பேருக்கு நேரடி​யாக​வும், 6 ஆயிரம் பேருக்கு மறை​முக​மாக​வும் என 10 ஆயிரம் பேருக்​கும், மசகான் நிறு​வனத்​தில் 5 ஆயிரம் பேருக்கு நேரடி​யாக​வும், 40 ஆயிரம் பேருக்கு மறை​முக​மாக​வும் என 45 ஆயிரம் பேருக்​கு வேலை​வாய்ப்பு உரு​வாகும்.

இதுத​விர, பல்​வேறு முக்​கிய​மான சர்​வ​தேச நிறு​வனங்​களின் அதி​காரி​கள் விரை​வில் தமிழகம் வர உள்​ளனர். அப்​போது கூடு​தல் தகவல்​கள் வெளி​யாகும். இந்த இரு முதலீட்டு திட்​டங்​களும் தூத்​துக்​குடி துறை​முகத்தை ஒட்​டியே அமைய உள்​ளன. இதுத​விர, மற்ற துறை​முகங்​கள் தொடர்​பான திட்​டங்​களுக்​கும் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறோம்.

தூத்​துக்​குடி​யில் நடை​பெற்ற நிகழ்​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசும்​போது, கடல்​சார் போக்​கு​வரத்​து, உற்​பத்தி கொள்கை உரு​வாக்​கப்​படும் என்​றும் அறி​வித்​திருந்​தார். அந்த கொள்கை தொடர்​பாக, நாங்​கள் தற்​போது பல்​வேறு நிறு​வனங்​களு​டன் பேசி வரு​கிறோம். தமிழகத்​தில் ஒரு முதலீடுதிட்​டத்​துக்கு ஒப்​பந்​தம் போட்​டதும், தலை​மைச்​செயலர் தலை​மையி​லான கமிட்டி ஆய்வு செய்​கிறது. திட்​டத்​துக்​கான ஒப்​புதல் எளிமைப்​படுத்​தப் பட்​டுள்​ள​தால்​தான், உலகள​வில் தொழில் செய்​வ​தில் தமிழகம் முதலிடத்​தில் உள்​ளது.

தேசிய நலன் என்று வரும்​போது முதல்​வர் எப்​போதும் அரசி​யல் செய்ய விரும்ப மாட்​டார். மத்​திய அரசுக்கு தேவை​யான ஒத்​துழைப்பு அளிப்​போம். கப்​பல் கட்​டு​தல் என்​பது இந்​தி​யா​வுக்கு மிக​வும் முக்​கி​யம். இன்​னும் பல கப்​பல் கட்​டும் நிறு​வனங்​கள் வர உள்​ளன. உலக முதலீட்​டாளர்​கள் மா​நாட்டை இந்​தாண்​டில் நடத்​து​வது குறித்​து ஆலோ​சித்​து வரு​கிறோம்​. இவ்​வாறு அவர்​ தெரிவி்த்​தார்​.