சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முகத்தை கர்சிப்பால் துடைத்தை, அவர் முகத்தை மறைத்துக்கொண்டு சென்றதாக செய்திகளை பரப்பிய டெல்லி செய்தியாளர் நிரஞ்சனுக்கு அதிமுக தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு முகத்தை மூடியபடி எடப்பாடி பழனிசாமி காரில்சென்ற காட்சி தொடர்பான செய்தி வெளியிட்ட நிரஞ்சன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், “மக்களாட்சியின் நான்காம் தூண்” என்ற பெயருக்கு இலக்கணமாகத் திகழ வேண்டிய ஊடகங்கள், திமுக-வின் Agenda Carriers-ஆக செயல்படுவது, வெடக்கக்கேடு என கடுமையாக சாடியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 16ம் தேதி தனது கட்சி நிர்வாகிகளுடன், குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்நத் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நேரில் வாழ்த்து தெரிவிப்பதாகக்கூறி டெல்லி சென்றார். அங்கு ராதாகிருஷ்ணனை சந்தித்து விட்டு, அன்றைய தினம இரவு 8.10 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு பழனிசாமி மாற்று வாகனத்தில் முகத்தை மூடியபடி அமித்ஷாவின் இல்லத்தில் இருந்து வெளியேறியதாக செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரலாகின. ஆனால், எடப்பாடி தான் முகத்தை கர்சீப்பால் துடைத்தபடி வந்ததாக கூறினார்.
ஆனார்ல, திய தலைமுறையின் முன்னாள் செய்தியாளர் நிரஞ்சன் அமித்ஷா இல்லத்தில் இருந்து வெளியேறிய எடப்பாடி பழனிச்சாமி முகத்தை மூடியபடி வெளியே வந்தார் என புநேரடி ஒளிபரப்பு செய்தார். இது வைரலானது. இதை வைத்து திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள், எடப்பாடியை கடுமையாக விமர்சித்தன.
இதனால் கோபம் அடைந்த அதிமுகவினர் நிரஞ்சனுக்கு எதிராக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் இது தொடர்பாக அதிமுக ஐடி விங் வெளியிட்டுள் சமூக வலைதளப்பதிவில், “மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குறித்து, ஊடக அறத்திற்கு முற்றிலும் விரோதமாக அவதூறு செய்தி வெளியிட்டு பரப்பிய பத்திரிகையாளர் திரு.நிரஞ்சன் மீது கழகத்தின் சார்பில் சட்ட நடவடிக்கை தொடுப்பதற்கான முதல் படியாக Legal Notice அனுப்பப்பட்டுள்ளது.
திமுக சார்பு நிலைப்பாடு கொண்டு, பத்திரிகையாளர் என்ற போர்வையில், மக்கள் நம்பும் ஊடகத்தை கருவியாகக் கொண்டு திமுக-வின் Narrative-களை சுமக்கும் கொத்தடிமைகளை அஇஅதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. “மக்களாட்சியின் நான்காம் தூண்” என்ற பெயருக்கு இலக்கணமாகத் திகழ வேண்டிய ஊடகங்கள், ஒரு கட்சியின், அதுவும் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பை சம்பாதித்துள்ள திமுக-வின் Agenda Carriers-ஆக செயல்படுவது, தங்களை நம்பும் தமிழக மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம் என்பதை உணர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.