சென்னை: சைவ வைணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான புஸ்ஸுகாகி போயுள்ளது. அவர்மீதான 115 வழக்குகளும் முடித்து வைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்து உள்ளது. இது வியப்பை ஏற்படுத்திஉள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சைவ வைணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 115 புகார்கள் பதியப்பட்ட நிலையில், இந்த வழக்கை காவல்துறையே விசாரணை நடத்தி முடித்து வைத்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், பொன்முடிக்கு எதிரான வழக்கை முடித்து வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

உலகின் முதல்மதமான பாரம்பரியமான இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிய முன்னாள் திமுக அமைச்சர்மீதான வழக்கை திமுக அரசின் காவல்துறையும், நீதிமன்றம் முழுமையான விசாரணையின்றி முடித்து வைத்திருப்பது, நீதிமன்றம் மற்றும் காவல்துறையினர் மீதான நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
பெண்களை குறிப்பிட்டு சைவ வைணவ மதங்கள் தொடர்பாக முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதனால் பொன்முடியின் கட்சி பதவியும் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.
இந்த சூழலில் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெகன்நாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதேசமயம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் பொன்முடி பேசியது தொடர்பாக உயர் நீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த விசாரணையின்போது, காவல்துறையிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி, அதுகுறித்த ஆவண்ஙகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு நேற்று (செப்டம்பர் 16) விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட 115 புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்புகை பெறப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ”பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி இதுபோன்ற பேச்சை தவிர்த்திருக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. எனினும் பொன்முடிக்கு எதிராக தனிநபர் புகார் தெரிவிக்கலாம். புகார்களை காவல்துறையினர் முடித்து வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்” என்று உத்தரவு பிறப்பித்தார்.
பெண்கள் குறித்து அவதூறு: பொன்முடிமீது உயர்நீதிமன்றம் சுமோட்டோ வழக்கு பதிவு… காவல்துறைக்கு கண்டனம்
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு அடங்கிய வீடியோ தொகுப்பு நீதிமன்றத்தில் தாக்கல்!