சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தடையை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சிதெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை என்பது இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும், தென்னிந்தியாவின் பிற கிழக்குக் கரையோரப் பகுதிகளிலும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை நிகழும் ஒரு மழைக்காலமாகும்.  இது ஜனவரி வரை தொடரும். அதன்பிறகு மழைக்காலம் முடிவுக்கு வருகிறது. இந்த காலகட்டத்தில் வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீசி மழையை கொண்டுவருகிறது. தென்மேற்குப் பருவமழை முடிவடைந்த பிறகு, அதாவது அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இருந்து இந்த வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.
இந்த நிலையில்,  வடகிழக்கு பருவமழை காலத்தில் தடையை மீறி பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. பொது இடங்கள், சாலையோரங்களில் தடையை மீறி பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வடகிழக்கு பருவமழையை ஒட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.