சென்னை; தமிழ்நாடு அரசு சார்பில், இளைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  அவரது சிம்பொனி இசையை கவுரவிக்கும் வகையில், வரும் 13ந்தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இசையமைப்பாளா் இசைஞானி  இளையராஜா மேற்கத்திய – கர்நாடக இசை கலந்த ‘வேலியண்ட்’ பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் 2025ம் ஆண்டு  மார்ச் 8-ஆம் தேதி அரங்கேற்றினார். அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பல தரப்பிலும்  வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்த சாதனையை செய்துவிட்டு லண்டனில் இருந்து சென்னைக்கு  இளையராஜா திரும்பியதும், அவருக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்,   அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் விதமாக தமிழக அரசு தரப்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று மு  அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக, செப். 13 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு விழா நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மேலும் வெளிநாட்டு இசைக்கலைஞர்களின் இசைக் கச்சேரி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி திரையுலகைச் சேர்ந்தவர்களும் இளையராஜாவுக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.