மதுரை: தமிழகத்​தில்  உள்ள கோயில்களில் இருந்து கிடைக்கும்  நிதி​யில்  இருந்து,  திருமண மண்​டபம், வணிக வளாகம், கல்வி நிறு​வனங்​கள் கட்​டு​வது தொடர்​பாக திமுக அரசு பிறப்பித்த அரசாணைகளை சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

கோயில்களின் வருமானம் கோயில்களின் மேம்பாடு, பராமரிப்பு மற்றும் ஆன்மீக நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து வலுவானதாக உள்ளது. ஆனால், ஆட்சியாளர்கள், தங்களது சுயநலத்துக்காகவும், அரசியலுக்காகவும்  பல்வேறு  பொது நலத்திட்டங்கள் அல்லது வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இது கடுமையாகன விமர்சனங்களை ஏற்படுத்திஉள்ளது.
 இந்து சமய அறநிலையத்துறை சட்டம், 1959 இன் கீழ் உள்ள கட்டுப்பாடுகள் தொடர்பான பல சட்ட, சமூக மற்றும் அரசியல் கேள்விகளை எழுப்புகிறது.  தமிழ்நாட்டில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் மூலம்,  வருமானத்தை நிர்வகிக்கவும், அது எப்படி செலவிடப்பட வேண்டும் என்பதை வழிகாட்டவும் இந்த சட்டங்கள் உதவுகின்றன. ஆனால், இந்த வருமானத்தின் ஒரு பகுதி பொது செலவினங்களுக்கோ அல்லது அறநிலையத்துறையின் பிற செயல்பாடுகளுக்கோ பயன்படுத்தப்படுவது சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. 
இதன் காரணமாக 2021ம் ஆண்டு ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், கோவில் நிதிகளை மற்ற பணிகளுக்கு செலவிடும் வகையில் பல்வேறு அரசாணைகளை வெளியிட்டது. அதன்படி,  2021-22, 2022-23 2023-24, 2024-25, 2025-26 ஆண்​டு​களில் அறநிலை​யத் துறை பிறப்​பித்த அறி​விப்​பாணை​களை ரத்து செய்​யக் கோரி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி, செந்​தில்​குமார், பாண்​டிதுரை, கனக​ராஜ், நாச்​சி​யப்​பன், ராம ரவி​கு​மார் ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்தனர். இந்த மனுக்​களை நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஜி.அருள்​முரு​கன் அமர்வு விசா​ரித்து வந்தது. வழக்கில், தமிழ்நாடு  அறநிலை​யத் துறை சார்​பில் அரசு வழக்​கறிஞர் பி.சுப்பாராஜ், மனு​தா​ரர்​கள் சார்​பில் வழக்​கறிஞர்​கள் ராம.அருண்​சு​வாமி​நாதன், ஜெய​ராம் சித்​தார்த், ஏ.ஆர்.லக் ஷ்மணன், விஷ்ணுவர்த்​தன் ஆகியோர் வாதிட்​டனர்.
காரசாரமான வாதங்கள் பல கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பின்படி,  கோயில் உபரி நிதி​யில் திருமணமண்​டபம், வணிக வளாகங்​கள், கல்வி நிறு​வனங்கள் கட்ட அரசு முடிவு செய்​துள்​ளது. இதை யடுத்து அறநிலை​யத்துறை பட்​ஜெட் நிதி மற்​றும் கோயில் உபரி நிதி​யில் கோயில் வளாகம் மற்​றும் பிற இடங்​களில் திருமண மண்டபம் மற்​றும் வணிக வளாகங்​கள் கட்ட அறி​விப்​பாணை​களை பிறப்பித்​துள்​ளது.

இந்த அறி​விப்​பாணை​கள் வணிக நோக்​கத்​தில் பல்​வேறு கட்​டிடங்​களை கட்​டு​வதன் மூலம் அறநிலை​யத் துறை வணிக நடவடிக்​கை​யில் இறங்​கி​யிருப்​பதை காட்​டு​கிறது. கோயில் உபரி நிதி​யில் திரு​மணம் கட்​டும் விவ​காரத்​தில் உயர் நீதி​மன்​றத்​தில் ஏராள​மான வழக்​கு​கள் தொடரப்​பட்​டு, அந்த வழக்​கு​களில் விரி​வாக விவாதம் நடத்​தப்​பட்டு உத்​தர​வு​கள் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளன.

அந்த வழக்​கு​களில் எழுப்​பப்​பட்​டுள்ள விவ​காரங்​கள்​தான் இந்த வழக்​கு​களி​லும் எழுப்​பப்​பட்​டுள்​ளன. இதனால் அவற்​றின் உத்​தரவு இந்த வழக்​கு​களுக்​கும் பொருந்​தும். அந்த உத்​தர​வின்​படி, கோயில் நிதியை இந்து மத நிகழ்​வு​கள், கோயில் மேம்​பாடு, பக்​தர்​களின் நலன் ஆகிய​வற்​றுக்​குத்​தான் பயன்​படுத்த வேண்​டும். இதைக் கருத்​தில் கொள்ளாமல் கோயில் நிதி​யில் வணிக ரீதி​யாக கட்​டிடங்​கள் கட்ட முடிவு செய்து தமிழ்நாடு அரசு  அறி​விப்​பாணை​களை வெளி​யிட்டுள்ளது.

இது அறநிலை​யத் துறை சட்​டத்​துக்கு எதி​ரானது. எனவே, கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டு​வது தொடர்​பான அரசாணை ரத்து செய்​யப்​படு​கிறது எனக் கூறப்​பட்​டுள்​ளது. இந்த உத்​தர​வின்​படி கோயில் நிதி​யில் திருமண மண்​டபம், வணிக வளாகம், கல்வி நிறு​வனங்கள் கட்​டு​வது தொடர்​​பான அரசு மற்​றும்​ அறநிலை​யத்​ துறை​யின்​ உத்​தரவு மற்​றும்​ அறி​விப்​​பாணை​கள்​ ரத்​து செய்​யப்​படு​கின்​றன

இவ்​​வாறு நீதிப​தி​கள்​ தீர்ப்பில் கூறி உள்ளனர்.