சென்னை; வார இறுதி விடுமுறை  நாள் உள்பட 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், பொதுமக்கள் வசதிக்காக இன்றுமுதல் 2,910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளத.

முகூா்த்த தினம், மீலாது நபி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,910 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்  என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பில், முகூா்த்த தினமான வியாழக்கிழமை (செப்.4), மீலாது நபி பண்டிகை நாளான வெள்ளிக்கிழமை (செப்.5), வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (செப்.6, 7) ஆகிய தினங்களை முன்னிட்டு, சென்னையில் இருந்தும், பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை (செப்.3) 360 பேருந்துகள்,  வியாழக்கிழமை 710 பேருந்துகள், வெள்ளிக்கிழமை 405 பேருந்துகள், ஞாயிற்றுக்கிழமை பல்வேறு ஊா்களிலிருந்து சென்னைக்கு 875 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை 80 பேருந்துகள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 105 பேருந்துகள், மாதாவரத்தில் இருந்து புதன் மற்றும் வியாழன் ஆகிய நாள்களில் 25 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 2,910 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும்.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.