சென்னை: சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ள நிலையில், அக்கல்லூரியின் துணைவேந்தர் தற்காலிக மாக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ரூ. 5 கோடி வரையில் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. பல்வேறு செலவினங்களில் முறைகேடு நடந்துள்ளதைக் கணக்கு குழுவினர்க் கண்டறிந்தனர். இந்த சம்பவம் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இந்த முறைகேடு விவகாரத்தில் கல்லூரியின் முதல்வர் உள்பட மொத்தம் 5 பேர் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வர் உட்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மூவர்ப் பிற இடங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர்க் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த பல்கலைக்கழக நிர்வாகக்குழு, 15 நாட்களில் அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.