சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்தை தாண்டிய நிலையில், தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

100 வயதாகும், இ. கம்யூ கட்சி மூத்த தலைவர் வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு திடீரென வீட்டில் வழுங்ககி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால்,  தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் உடடினயாக அவரை  சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அவருக்கு உடனே மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தலையில் காயம் ஏற்பட்ட பகுதியில், தையல் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக,  அவரது உடல்நிலை குறித்து, மருத்துவமனை இயக்குநர் தில்லை வள்ளல் வெளியிட்ட அறிக்கையில்,  இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு, கடந்த 22ம் தேதி, வீட்டில் தவறி விழுந்தார். அதனால், தலையில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ‘ஸ்கேன்’ எடுக்கப்பட்டது. , தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நரம்பியல், நுரையீரல், இதயம் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் அடங்கிய மருத்துவர் குழு, சிகிச்சை அளிக்கிறது. தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாளில், வீடு திரும்புவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.