சென்னை: வாட்ஸ்அப் மூலம் தமிழ்நாடு அரசின் 50 சேவைகள்  வழங்கும் வகையில்,  மெட்டா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, வாட்ஸ்அப் அடிப்படையிலான குடிமக்கள் சேவைகளை அறிமுகப்படுத்த மெட்டாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இதன்மூலம்  இதன் மூலம், ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள், பிறப்பு மற்றும் வருமானச் சான்றிதழ்கள், வரி செலுத்துதல், வணிக உரிமங்கள் மற்றும் அரசு பேருந்து டிக்கெட் முன்பதிவு போன்ற பல சேவைகளை இனி உங்கள் வாட்ஸ்அப்பிலேயே பெற முடியும்.

இனிமேல் அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய அவசியமில்லை. கையில் இருக்கும் வாட்ஸ்அப் போதும்! தமிழ்நாடு அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து, வாட்ஸ்அப் மூலம் 50க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை வழங்க ஒரு புரட்சிகரமான திட்டத்தை தொடங்கியுள்ளது. ரேஷன் கார்டு சம்பந்தமான வேலைகள், பிறப்புச் சான்றிதழ் பெறுவது, வரி செலுத்துவது, ஏன் அரசு பஸ் டிக்கெட் புக் செய்வது கூட இனி வாட்ஸ்அப்பிலேயே முடித்துவிடலாம். இந்த புதிய முயற்சி, மக்களுக்கு அரசு சேவைகளை மிக எளிமையாகவும், விரைவாகவும் கிடைக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இயங்கும் ஒரு அதிநவீன (ஏஐ) சாட்பாட் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வாட்ஸ்அப் வழியாக 50 தமிழ்நாடு அரசு சேவைகள் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு, பிறப்பு மற்றும் வருமானச் சான்றிதழ் பெறுவது, வரி செலுத்துவது, வணிக உரிமங்கள் பெறுவது, அரசு பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது உள்ளிட்ட 50 அரசு சேவைகளை விரைவில் வாட்ஸ்அப் மூலம் எங்கிருந்தும் எளிதாகப் பெற முடியும். இந்த புதிய முயற்சி மூலம் மக்களுக்கு அரசு சேவைகளை மிகவும் எளிமையாகவும் வசதியாகவும் வழங்க முடியும்.

இந்த சேவைகளை வழங்குவதற்காக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் செயல்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான சாட்பாட் உருவாக்கப்பட்டுள்ளது. , ஒரு சேவைக்கு விண்ணப்பிக்க வேண்டிய படிவங்களை நிரப்புவது, ஆவணங்களை பதிவேற்றுவது, சான்றிதழ்களை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்வது ஆகியவை அனைத்தையும் வாட்ஸ்அப்பிலேயே செய்ய முடியும். கூடுதலாக, இந்த சேவைகளுக்கான கட்டணத்தை வாட்ஸ்அப்பின் சொந்த கட்டண வசதி மூலமாகவோ அல்லது மற்ற டிஜிட்டல் கட்டண முறைகள் மூலமாகவோ செலுத்தலாம்.

இந்த சாட்பாட் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரையாடி, வாட்ஸ்அப்பின் ‘ப்ளோ’ அம்சத்தைப் பயன்படுத்தி பயனர்களை பொருத்தமான சேவைகளுக்கு வழிநடத்தும். மக்களின் கோரிக்கைகளைப் புரிந்து கொள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமை இந்த வாட்ஸ்அப் அடிப்படையிலான மின்னாளுமை சேவையை அடுத்த மூன்று மாதங்களில் தொடங்க உள்ளது.

இந்த திட்டத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இந்த சேவையை அறிமுகப்படுத்துவதற்கு முன், தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமை, மெட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது. இந்த சேவைகள் குறைந்தபட்சம் 13 அரசு துறைகளை உள்ளடக்கும். மேலும் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி வாட்ஸ்அப் எண்கள் ஒதுக்கப்படும்.

முதல் கட்டமாக, அடுத்த 3 மாதங்களில் 50 சேவைகளை வாட்ஸ்அப் மூலம் வழங்க தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமை திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு, மேலும் 50 சேவைகளை இரண்டு கட்டங்களாக சேர்க்க உள்ளது. முதல் கட்டத்தில் மொத்தம் 100 சேவைகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ள இம்முகமை, இறுதியாக தமிழ்நாட்டில் உள்ள மின்சேவை மையங்களில் வழங்கப்படும் 34,843 சேவைகளையும் வாட்ஸ்அப் தளத்தில் கிடைக்கச் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முயற்சி, அரசு சேவைகளை மக்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் கிடைக்கச் செய்யும்.

* கிடைக்கும் சேவைகள்

* ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், முகவரி மாற்றம், உறுப்பினர்களை சேர்ப்பது அல்லது நீக்குவது.

* பிறப்பு, வருமானம், முதல் பட்டதாரி, வசிப்பிடம், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்கள்.

* நீர் மற்றும் சொத்து வரி செலுத்துதல், உரிமையியல் சான்றிதழைப் பார்ப்பது மற்றும் பதிவிறக்கம் செய்வது.

* வழிகாட்டு மதிப்பு அறிதல், மின்கட்டணம் செலுத்துதல்.

* தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் படகு இல்லங்களை முன்பதிவு செய்வது.

* விண்ணப்பங்களின் நிலையை சரிபார்த்தல்.

எப்படி இயங்குகிறது இந்த சாட்பாட்?

இந்த சாட்பாட், உங்கள் கோரிக்கைகளைப் புரிந்துகொண்டு, உங்களுக்குத் தேவையான சேவைக்கு வழிகாட்டும்.

விண்ணப்ப படிவங்களை நிரப்புவது, தேவையான ஆவணங்களை அப்லோட் செய்வது, கட்டணம் செலுத்துவது என எல்லாவற்றையும் வாட்ஸ்அப்பிலேயே செய்துவிடலாம்.

வாட்ஸ்அப்பின் சொந்த கட்டண வசதி அல்லது பிற டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்தி பணத்தைச் செலுத்தலாம்.

நீங்கள் விண்ணப்பித்த சான்றிதழ்களை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த சாட்பாட், அடுத்த மூன்று மாதங்களில் செயல்படத் தொடங்கும் என்று தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமை தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக 50 சேவைகள் தொடங்கப்பட்டு, படிப்படியாக மேலும் பல சேவைகள் சேர்க்கப்படும். இறுதியாக, மின்சேவை மையங்களில் கிடைக்கும் 34,843 சேவைகளையும் வாட்ஸ்அப் வழியாகக் கொண்டுவருவதே இத்திட்டத்தின் பெரிய இலக்கு.

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘மெட்டா’ நிறுவனத்தின் இந்திய வர்த்தக மெசஜ் பிரிவு இயக்குனர் ரவி கார்க் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு சேவைகளைப் பெற இனி நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை; இனி உங்கள் ஸ்மார்ட்போனிலேயே எல்லாம் சாத்தியம்! இந்த புதிய முயற்சி தமிழ்நாட்டில் டிஜிட்டல் மாற்றத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.