சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் சுதந்திர தின தேநீர் விருந்தை தமிழ்நாடுஅரசு புறக்கணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற காரணமாக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளுடன் தவெகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், நேற்று மாலை தமிழ்நாடு அரசும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு திமுக கட்சி சார்பில் ஆளுநர் விருந்தை புறக்கணித்தபோதும், தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். ஆனால், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது.
இந்நிலையில் ஆளுநர் ரவியின் தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழர் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி விருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் மாளிகை அளித்த தேநீர் விருந்தில் கலந்துகொள்ள தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் விஜய் கலந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.