சென்னை: குப்பை அள்ளும் பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து, சென்னையில் உள்ள 4 மண்டல தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலையோரத்தில்  இரவு பகலாக நடத்தி வரும் போராட்டம் இன்று 11வது நாளாக நீடித்து வருகிறது.
இதற்கிடையில், தூய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு திமுக கூட்டணி கட்சியான  திக, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும்,  பாமக, நாம் தமிழர், அமுமுக மற்றும் பல தொழிற் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஆனால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் தமிழ்நாடு அரசு  ஆர்வம் காட்டவில்லை, மிரட்டல் விடுக்கும் போக்கே தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை மாநக​ராட்​சி​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு விட்​டதை கண்​டித்​தும், பணி நிரந்​தரம் கோரி​யும், ஏற்​கெனவே என்​யூஎல்​எம் திட்​டம் மூலம் வழங்கப்பட்ட தூய்​மைப் பணியை தொடர வலி​யுறுத்​தி​யும் தூய்​மைப் பணியாளர்​கள் ரிப்​பன் மாளிகை முன்​பு, இரவு, பகலாக அங்​கேயே தங்​கி, நேற்​றும் 11வது நாளாக போராட்​டத்தை தொடர்ந்​தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில்   7 கட்ட பேச்​சு​வார்த்​தைகள் முடிந்​துள்ளதுடன், இரவு நேரத்தில் அமைச்சர் சேகர்பாபு சென்று மிரட்டியது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில், இதுவரை  தீர்வு எட்​டப்​பட​வில்​லை.
 “இந்த பேச்​சு​வார்த்​தை​யில் எங்களது கோரிக்​கையை பற்றி ஒரு வார்த்தை கூட பேச​வில்​லை. எங்​களை அப்​புறப்​படுத்​து​வதை பற்றி மட்​டுமே அமைச்சர்கள் பேசி வருகின்றனர். போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​வோரிடம், திமுக கவுன்​சிலர்​கள் பணத்​தாசை காட்​டி, இந்த போராட்​டத்தை கலைக்க பார்க்கின்றனர்” என்​று என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய  உழைப்​போர் உரிமை இயக்க தலை​வர் பாரதி, “எங்​களது கோரிக்​கையை ஏற்​கும் வரை போராட்​டம் தொடரும். போராட்​டக்​காரர்​கள் பணிக்கு திரும்​பிய​தாக வரும் தகவல் அனைத்​தும் பொய்” என்​றார்.
இதனிடையே, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர் சண்​முகம், போராட்​டக்​காரர்​களை சந்​தித்து ஆதரவு தெரி​வித்​தார். அதுபோல நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.
பின்​னர்  செய்​தி​யாளர்​களை சந்தித்த சண்முகம், “நாடு முழு​வதும் தனி​யார்​ மய​மாகி வரு​கிறது. தமிழகத்​தி​லும் பல்​வேறு துறைகள் தனி​யார்​ மய​மாகிறது. இருப்​பினும், ஏற்​கெனவே பெற்று வரும் உரிமை​களை பறிப்​பதை ஏற்க முடி​யாது. நியாய​மான முறை​யில் தூய்மை பணியாளர் போராட்டத்துக்கு தீர்​வு​காண நாங்​கள் முயற்சி மேற்​கொள்​வோம்’’ என்றார்.
நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசும்போது,   நகரத்தை சுத்​தம் செய்​யும் பணியை தனி​யாருக்கு கொடுக்க வேண்​டிய அவசியம் என்ன? பின் எதற்​காக மாநக​ராட்சி இருக்​கிறது? தூய்மை பணி​யாளர்​களை பணி நிரந்​தரம் செய்ய நிதி இல்லை என்கின்​றனர். ஆனால் மதுரை​யில் ரூ.200 கோடி​யில் மறைந்த முதல்​வர் கருணாநிதி பெயரில் நூல​கம் கட் டி​யிருக்​கின்​றனர்.
இது​போன்ற தேவையில்​லாத செல​வு​கள் செய்து பொய்​யான வாக்​குறு​தி​களை கொடுத்​து​விட்டு மக்​களை ஏமாற்​று​வது எந்​தவகை​யில் நியாயம்? இதனால் இன்​றைக்கு குப்பை அள்​ளும் மக்​கள் போராட்ட களத்​துக்கு வந்​து​விட்​டனர். எனவே 2021-ல் கொடுத்த வாக்​குறுதி​களை முதல்​வர் நிறைவேற்ற வேண்​டும் என்று வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பாமக பொருளாளர் தில​க​பாமா போராட்​டக்​காரர்​களை நேரில் சந்​தித்து ஆதரவு தெரி​வித்​தார். ‘
தூய்​மைப் பணி​யாளர்​களின் கோரிக்​கையை சமூகநீ​திக் கண்​ணோட்​டத்​தில் அரசு பரிசீலிக்க வேண்​டும்’ என்று திரா​விடர் கழகத் தலை​வர் கி.வீரமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.
‘பேச்​சு​வார்த்தை எனும் பெயரில் மிரட்டி தூய்​மைப் பணி​யாளர்​களின் அறப்​போ​ராட்​டத்தை கலைக்க முற்​படு​வது கடும் கண்​டனத்​துக்​குரியது’ என்று அமமுக பொதுச் ​செய​லா​ளர் டிடிவி தினகரன்​ தெரிவித்​துள்​ளார்​.