சென்னை: அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம்; மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சி. இருமொழி கொள்கையே கடைபிடிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் கலையரங்கில் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டர். ஒன்றிய தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக மாநிலத்துக்கு தனியாக கல்வி கொள்கை வெளியிட்டார். அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் பார்த்தாலே ஒரு புதிய ஆற்றல் வந்துவிடும் என்று கூறிய முதல்வர், மாணவர்களை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்து கூறி வருகிறேன். இளைய பருவத்தில் என்ஜாயும் பண்ணலாம், நன்றாகப்படித்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் வரலாம். * கொரோனா காலத்தில் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இல்லம் தேடி கல்வி திட்டம் வழங்கினோம். பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இது சிறப்பு வாய்ந்த விழா.
மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவுக்கு நன்றி. * தொலைநோக்கு பார்வையோடு மாநில கல்வி கொள்கையை உருவாக்கி உள்ளோம்.
100 சதவீதம் உயர்கல்வி கற்க வேண்டும் என்பதே நமது இலக்கு. 100 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வி பெற்றனர் என்ற இலங்கை எட்டுவதற்கு சாதித்த மாணவர்கள் உதவ வேண்டும். முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் நுழைய வேண்டும். *
கொரோனா காலத்தில் குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க இல்லம் தேடி கல்வி வழங்கினோம். பள்ளிக்கல்வி வரலாற்றில் இது மிகவும் சிறப்புவாய்ந்த விழாவாகும். எல்லா மாணவர்களும் பல்லகல்வித்துறையில் இருந்து உயர்கல்வியில் சேர வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளில் ஒற்றை இலக்கத்தில் இருந்த மாணவர் எண்ணிக்கை இவ்வாண்டு இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளது. திராவிட மாடல் அரசின் தாய்மை உணர்வுதான். அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 75 விழுக்காடு அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு விழா நடத்தியுள்ளது. மாணவர்கள் மீது அரசு வாய்த்த நம்பிக்கையின் பலன்தான் மாணவர்களின் சாதனை. ஐஐடிக்களில் இந்த ஆண்டு அரசுப்பள்ளி மாணவர்கள் 77 சேர்ந்துள்ளனர்.
காடு எதுவாக இருந்தாலும் சிங்கம் தான் சிங்கிள். எளிய பின்னணியில் இருந்து முயற்சியால் அரசு பள்ளி மாணவர்கள் முன்னுக்கு வந்துள்ளனர். மாநில கல்விக்கொள்கை வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையா ஆற்றலை வழங்கப் போகிறோம். மனப்பாடம் செய்வதை விட சிந்தித்து கேள்வி கேட்கும் ஆற்றலை வளர்க்கவே கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழும், ஆங்கிலமும் நம்முடைய இருமொழி கொள்கையாக இருக்கும். கல்வியோடு உடற்பயிற்சி, விளையாட்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் வேலைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் வழிகாட்டும். கல்வியில் மாபெரும் மாற்றத்தை கொண்டுவர இருக்கிறோம். கல்வி பாகுபாட்டை நீக்குவோம்.
மனப்பாடம் பண்ணும் மாணவர்கள் அல்லாமல் சிந்திக்கும் மாணவர்களை உருவாக்க உள்ளோம் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என நெஞ்சை நிமிர்த்தி பேச செய்த மாணவர்களுக்கு நன்றி என்றார்.
தமிழக பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக்கொள்கையே கடைப்பிடிக்கப்படும். தமிழும், ஆங்கிலமும் என இருமொழிக் கொள்கை தான் நமது உறுதியான கொள்கை. கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளோம். மதிப்பெண்களை நோக்கி அல்ல, மதிப்பீடுகளை நோக்கிய பயணமாக அமைக்கப்படும். பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு கூறினார்.