தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா ஆகஸ்டு 15ந்தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான  பச்சை சாத்தி உற்சவம் ஆகஸ்ட் 21ம் தேதியும்  ஆகஸ்ட் 23ம் தேதி தேரோட்டமும்  நடைபெற உள்ளது.
ஆவணி திருவிழாவின் போது நடைபெறும் பச்சை சாத்தி அலங்காரத்திலும், சிவப்பு சாத்தி அலங்காரத்திலும் முருகப் பெருமானை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகும். இதில் கலந்து கொள்பவர்களுக்கு முருகப் பெருமான் வேண்டிய வரங்களை அப்படியே அள்ளிக் கொடுப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் 2025ம் ஆண்டிற்கான ஆவணித் திருவிழா விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ஆவணித்திருவிழா     வரும்  14ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 13ம் தேதி கொடிமர விநாயகர் கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 14ம் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் ஆவணி திருவிழாவில் முக்கிய நிகழ்வான சிவப்பு சாத்தி உற்சவம் ஆகஸ்ட் 20ம் தேதியும், பச்சை சாத்தி உற்சவம் ஆகஸ்ட் 21ம் தேதியும் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 25ம் தேதி மஞ்சள் நீராடலுடன் ஆவணித் திருவிழா நிறைவு பெறும்.
ஆவணி திருவிழாவின் 2ம் நாள் துவங்கி, 12ம் நாள் வரை குமரவிடங்க பெருமான், வள்ளி அம்மையுடனும், திருவிழாவின் 2ம் நாள் துவங்கி, 10ம் நாள் வரை ஜெயந்திநாதரும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். பகல் வேளையில் தங்க சப்பரத்திலும், இரவில் வெள்ளி சப்பரத்திலும் ஜெயந்திநாதர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஆவணி திருவிழா விவரம்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா 12 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழழ வருகிற 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணியில் இருந்து 5.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.  மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
2-ம் திருவிழா  (ஆகஸ்டு 15) அன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், மதியம் 12 மணிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
3-ம், 4-ம்,  6-ம் திருவிழா (ஆகஸ்டு 16, 17, 19) ஆகிய 3 நாட்களிலும் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15-க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது.
 5-ம் திருவிழா திருவிழா (ஆகஸ்டு 18) அன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15-க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.
 7-ம் திருவிழா (20-ந்தேதி)  அன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 5 மணியில் இருந்து 5.30 மணிக்குள் உருகு சட்ட சேவை, காலை 9 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பர பவனியும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.
8-ம் திருவிழா 21-ந்தேதி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15-க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
ன்று காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
9-ம் திருவிழா 22-ந்தேதி சுவாமி சேர்க்கையை பொறுத்து பூஜை காலங்கள் மாறுபடும்.

23-ந்தேதி சனிக்கிழமை விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம்  நடக்கிறது. அன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15-க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

ஆகஸ்டு 24 மற்றும் 25ந்தேதிகளில் நடைபெறும் 11, 12-ம் திருவிழா நாட்களில் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று 12-ம் திருவிழாவோடு விழா நிறைவு பெறுகிறது.