சென்னை: நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் சென்னைக்கு வந்திருந்த நிலையில், ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் குடும்பம் சென்னையில் உள்ளது. இங்கு வந்திருந்த நிலையில், அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடடினயாக சிகிச்சை வழங்கப்பட்டு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel