சென்னை: இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டி முதலிடம்  பிடித்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து  முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், , இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திமுக அரசு. இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69 சதவிகித பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம். இப்போது அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19 சதவிகிதம் என மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு, 2010 – 11ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது. இப்போது அவர்வழி திமுக ஆட்சி; இரண்டுமே கழக ஆட்சி. 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்? என்றார்கள்.

இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது

 எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)

என்று குறிப்பிட்டுள்ளார்.