சென்னை: தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பல துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது 11 1 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவவில், (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):
1. சுன்சோங்கம் ஜடக் சிரு – போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் – முழு கூடுதல் பொறுப்பாக, இயற்கை வளங்கள் துறைச் செயலா் (போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையா்) ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
2. பிரசாந்த் மு.வடநெரே – நிதித் துறைச் செயலா் – செலவினம் (நிதித் துறை சிறப்புச் செயலா்) ஆகவும்,
3. ராஜகோபால் சுன்கரா – நிதித் துறை இணைச் செயலா் (நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா்) ஆகவும்,.
4. தீபக் ஜேக்கப் – நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் (கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநா்) ஆகவும்,.
5. கவிதா ராமு – கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநா் (அருங்காட்சியகங்கள் துறை இயக்குநா்) ஆகவும்,
6. இரா.கஜலட்சுமி – போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையா் (மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை ஆணையா்) ஆகவும்,
7. க.வீ.முரளீதரன் – மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநா் (சமூகப் பாதுகாப்புத் திட்ட இயக்குநா்) ஆகவும்,
8. கிரண் குராலா – சமூகப் பாதுகாப்புத் திட்ட ஆணையா் (தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா்) ஆகவும்,
9. கீ.சு.சமீரன் – தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் (தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநா்)ஆகவும்,
10. தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் – வணிகவரி இணை ஆணையா் – கோயம்புத்தூா் (வணிகவரி இணை ஆணையா் – ஈரோடு) ஆகவும்,
11. வெ.ச.நாராயணசா்மா – வணிகவரி இணை ஆணையா் – சென்னை (செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியா்) ஆகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.