பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருப்பவர் ஜாய் கிரிசில்டா இவர் கோவையைச் சேர்ந்த சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்துகொண்டதாக கடந்த மார்ச் மாதம் பரபரப்பை ஏற்படுத்தினார்.

சமையல் கலை தவிர ஓரிரு படங்களிலும் நடித்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதனால் முதல் மனைவியுடன் விவாகரத்து பெறாமலேயே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் தற்போது தான் 6 மாதம் கர்பமாக இருப்பதாகவும் ரங்கராஜும் தானும் கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் கூறி இன்று மற்றொரு பதிவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஜாய் கிரிசில்டா.

ஜாய் கிரிசில்டாவின் இந்த பதிவுகளை அடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமலேயே இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளாரா என்று சமூக வலைத்தளங்களில் பரபரக்கப்படுகிறது.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தொடரும் இந்த விவகாரம் குறித்து இதுவரை வாய்திறக்காமல் இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் தனது சமையலை ருசிபார்ப்பதில் மட்டுமே கவனமாக ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.