சென்னை

மிழக அரசு போக்குவரத்து கழகம் வார விடுமுறை மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு 1090 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது.

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்

”ஆடிபெருக்கு மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆகஸ்டு 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 340 பேருந்துகளும், 2-ந் தேதி (சனிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆகஸ்டு 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 55 பேருந்துகளும் 2-ந் தேதி (சனிக்கிழமை) 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்தில் இருந்து ஆகஸ்டு 1-ந் தேதி 20 பேருந்துகளும் 2-ந் தேதி 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.”

என அறிவித்துள்ளார்