டெல்லி: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டு எம்.பி.க்களும் இன்று மாநிலங்களவையில் பதவி ஏற்கிறார்கள். ஏற்கவே திமுக மற்றும் மநீம எம்.பி.க்கள் கடந்த 25ந்தேதி பதவி ஏற்ற நிலையில், அதிமுக எம்.பி.க்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள  இன்பதுரை, தனபால்  ஆகியோர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக  பதவியேற்கின்றனர். இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவையில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

. ஏற்கெனவே, திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை எம்பிக்களாக பதவியேற்ற நிலையில் இன்று அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பதவியேற்கின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நடைபெற்ற தேர்தல்லில் திமுக, அதிமுக, ம.நீ.ம.வைச் சோ்ந்த 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனர். திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா எம்.பி.யாக தமிழில் பதவி ஏற்றார் நடிகர் கமல்ஹாசன் – வீடியோ