சென்னை: தூத்துக்குடி விமான நிலையம் திறப்பு மற்றும், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளும் வகையில் இன்று மாலை தமிழ்நாடு வருகை தருகிறார்.

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை)  மாலை  மோடி தமிழகம் வருகிறார். இதற்காக மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.

இரவு 7.50 மணிக்கு அவர் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி,  இரவு 8.30 மணிக்கு 451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து, விமான நிலையத்தை பார்வையிட இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து  நடைபெறும் விழாவில், 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன்,  3,600 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரயில் மற்றும் சாலைத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைக்கவுள்ளார்.
ரெயில்வே துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.1,030 கோடி மதிப்பிலான பணிகள், நெடுஞ்சாலைத்துறையால் முடிக்கப்பட்டுள்ள ரூ.2, 571 கோடி மதிப்பிலான பணிகள், ரூ.548 கோடி மதிப்பீட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் என ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு கையாள்வதற்கான புதிய முனையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, தூத்துக்குடியில் இருந்து தனி விமானம் மூலம் இரவு 9.40 மணிக்கு திருச்சி புறப்படும் பிரதமர் மோடி இரவு 10.30 மணி அளவில் திருச்சி வருகிறார்.  திருச்சி விமான நிலையத்தில்    சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்குள்ள தனியார் விடுதியில் தங்குகிறார்.

இதையடுத்து  நாளை (ஞாயிற்றுகிழமை),  திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் பிரதமர் மோடி, நண்பகல் 12 மணிக்கு கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார். அங்கு, மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசு சார்பில் 5 நாட்கள் நடைபெறும் நிலையில், 4-ஆம் நாள் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்று, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

அதைத் தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் வழிபாடு நடத்துகிறார். பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி, அவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.