புதுக்கோட்டை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் புதுக்கோட்டை மாவட்ட பிரசாரப் பயணத்தில், திமுக நான்கரை ஆண்டுகால ஆட்சியின் ரிப்போர்ட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், திமுக ஆட்சியின் ரிப்போர்ட் கார்டு மற்றும் உருட்டுகளும் திருட்டுகளும் துரோகம் மாடல் உருட்டுகள் என்ற வில்லுப்பாட்டு வீடியோவையும் அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசாரப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரப் பயணத்தில், தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நேற்று முதல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவரது பயனத்தின் இடையே வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பினரை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறார்.
இன்று காலை புதுக்கோட்டை பகுதியில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இந்நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை விளக்கிப் பேசினார். மேலும் திமுக செயல்படுத்தாக திட்டங்கள் குறித்து மக்களிடையே துண்டுபிரசாரம் மூலம் விழிப்புனர்வு பிரசாரம் செய்யப்படும் என்று அறிவித்தார்.

அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று திமுக ஆட்சிக்கு எவ்வளவு மார்க் நீங்கள் போடுகிறீர்கள் என்று நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை கூறி சர்வே எடுக்கப்பட்டுள்ளது. 10 மார்க்குக்கு எவ்வளவு மார்க் திமுக அரசுக்கு மக்கள் கொடுக்கின்றனர் என்று அறிவதற்காக அதிமுக சார்பில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
இதனை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் மோடி பயணத்திட்டம் என்பது முறையாக எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை, அது கிடைத்த பிறகு தான் பிரதமர் மோடியை சந்திப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு திமுக ஆட்சியில் மரியாதை இல்லை, நேர்மையாக பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு சஸ்பெண்ட் ஆர்டர் தான் பரிசாக திமுக அரசு கொடுக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியது. காவல்துறை அதிகாரிகளுக்கு பிரச்சனை என்றால் உடனடியாக உயர் காவல்துறை அதிகாரிகள் அழைத்து பேசி அதனை தீர்த்து வைக்க வேண்டும், இதுதான் அரசின் கடமை, ஆனால் நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பழி வாங்குவது கண்டனத்துக்குரியது. நல்ல அரசுக்கு இது அழகல்ல,
அதிமுக சார்பில் வீடு வீடாக சென்று திமுக ஆட்சிக்கு எவ்வளவு மார்க் நீங்கள் போடுகிறீர்கள் என்று கேட்போம். அவர்கள் கொடுத்தால் கொடுக்கலாம் இல்லை என்றால் இல்லை என்று கூறலாம். இதற்காக நாங்கள் அவர்களுடைய செல்போன் நம்பரை கேட்கப் போவது கிடையாது.
அதிமுக, பாஜக கூட்டணியை உடைக்க முயற்சி நடக்கிறது என்று கூறுகிறீர்கள். அது யார் செய்வது என்ற கேள்விக்கு பதில் அளித்து எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாக இது அனைவருக்கும் தெரியும் யார் உடைக்க முயற்சி செய்வது என்று.
தமிழக முதல்வரும் துணை முதல்வரும் பிரதம மந்திரியின் வீட்டின் கதவை தட்டவில்லையா நான் தட்டியதை உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு பேசுகிறார் அவர் என்ன செய்தார். அவர்கள் செய்தால் சரி நாங்கள் உள்துறை அமைச்சர்கள் சந்தித்தால் தவறா. நான் டெல்லி சென்றபோது முதலமைச்சர்தான் உள்துறை அமைச்சர் சந்தித்தால் தமிழ்நாட்டு பிரச்சனையை எடுத்துக் கூறுங்கள் என்று கூறினார்.
டிடிவி தினகரன் கூட்டணி அமைச்சரவை என்று கூறுவதற்கு நான் பதில் சொல்ல தேவையில்லை அவர்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக கூறி வருகிறார். நாங்கள் ஒன்றும் கூறவில்லை. நாங்கள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்றார்.
இதையடுத்து செய்தியாளர்கள் அன்புமணி ராதாஸ் உரிமை மீட்பு பயணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, “தங்களுடைய கட்சியை வளர்ப்பதற்கு ஒரு தலைவர் ஒரு நடவடிக்கை எடுப்பார். அதை நாங்கள் ஏன் குறை சொல்ல வேண்டும், கருத்து சொல்ல வேண்டும். மக்களுடைய பிரச்சினையை தெரியாத அரசாக தான் திமுக அரசு உள்ளது
கொரோனா காரணமாக தான் அன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு அரசால் லேப்டாப் கொடுக்க முடியவில்லை. இதேபோன்று தாலிக்கு தங்கம் திட்டமும், அதன் கொரோனா காலத்தால் தான் கொடுக்க முடியாமல் இருந்தது. இந்தத் திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை திமுக அரசு தான் நிறுத்தியது.
அதிமுக அரசில் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போடுகின்றனர். அதே போன்று தான் காவேரி வைகை குண்டார் இணைப்பு திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ளனர். சமீபத்தில் வறுமையை காரணமாக வைத்து பொதுமக்களிடம் இருந்து கிட்னி திருட்டு நடைபெறுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,
சமீபத்தில் நடைபெற்ற கிட்னி திருட்டில் திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட ஒரு மருத்துவமனை என்பது அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சம்பவம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வறுமையை காரணமாக வைத்து இது போன்ற சம்பவங்கள், திருட்டுக்கள் நடப்பது என்பது
மிகவும் வேதனைக்குரிய செயல் என்று தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியின் இறுதியில், திமுகவின் நான்கரை ஆண்டுகள் த ஆட்சி பற்றிய ‘ரிப்போர்ட் கார்டு’ என்ற பெயரில், ஒரு அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில் வாக்காளர்கள் போட்ட மதிப்பெண்களையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
தேர்தல் வாக்குறுதிகளாக திமுக சொன்னவற்றை செய்யவில்லை. இதற்கான ‘வில்லுப்பாட்டு’, ‘சொன்னீங்களே செஞ்சீங்களா’ என்ற விடியோ காட்சி களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக கொடுத்த வாக்குறுதிகளைச் சொல்லி ‘துரோக சக்கரம்’ என்ற ஏமாற்றிய சக்கர வடிவம் ஒன்றையும் மேடையில் வைத்துக் காட்டினர்.
உருட்டுகளும் திருட்டுகளும் என்ற பெயரில் புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில், திமுக ஆட்சியை விமர்சிக்கும் வில்லுப்பாட்டு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று மதியம், புதுக்கோட்டை பகுதியில் முக்கியப் பிரமுகா்கள் சந்திப்பு நடைபெறுகிறது. தொடா்ந்து மாலை 4.30 மணிக்கு புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே பேசுகிறாா். கீழராஜவீதியில் சாலையில் மக்கள் சந்திப்பு (ரோடு ஷோ) முடித்துக் கொண்டு புறப்படும் அவா், விராலிமலை மற்றும் திருமயம் பகுதிகளில் பேசுகிறாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் எடப்பாடி சுற்றுப்பயணத்துக்கு தேவையான ஏற்பாடுகளை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கா், தெற்கு மாவட்டச் செயலா் பி.கே. வைரமுத்து ஆகியோா் தலைமையில் அதிமுக நிா்வாகிகள் செய்துள்ளனா்