சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற இருந்த முதுகலை ஆசிரியர் பணியிட தேர்வு மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களுக்காக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 தேர்வு செப்டம்பர் 28ல் நடக்கும் என ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், தேர்வு தேதியை மாற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 28ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெற உள்ளதால், முதுகலை ஆசிரியர் பணியிட தேர்வு தேதியை மாற்றி அறிவித்துள்ளது.
அதன்படி, தேர்வு தேதி செப்டம்பர் 28க்கு பதிலாக அக்டோபர் 12ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel