சென்னை

விசிக தலைவர் திருமாவளவன் அதிமுகவை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் பெரிய கட்சியாகத் துடிப்பதாக விமர்சித்துள்ளார்.

நேற்ரு சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம்,

”இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர், திடீரெனபதவி விலகி இருப்பது அதிர்ச்சி அளிப்பதோடு, இது பெரும் அரசியல் சதி என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. அவரை கட்டாயப் படுத்தி, கையெழுத்து பெற்றதாக வலுவான சந்தேகம், எழுந்துள்ளது. எனவே உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

பா.ஜனதா, கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்தி, அவர்கள் முதுகில் சவாரி செய்து, மாநிலங்களில் காலூ ன்றி வருகிறது. அதே உத்தியை தமிழகத்திலும் பா.ஜனதா கடைப்பிடித்து வருகிறது. தி.மு.க.வை ஆட்சி அதிகா ரத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை விட, அ.தி.மு.க. வை பலவீனப்படுத்தி, தமிழகத்தில்ல் 2-வது பெரிய கட்சியாக வருவதற்கு பா.ஜனதா முயற்சி செய்கி றது. அ.தி.மு.க.வை பயன் படுத்தி இங்கே வளர துடிக்கின்றனர்.

தி.மு.க. கூட்டணியில் இருப்பதால்தான் பா.ஜக, அ.தி.மு.க.வை விமர்சிக்கி றோம் என்று சிலர் கருது கின்றனர். கூட்டணியில் இருந்தாலும் இல்லா விட்டாலும், பா.ஜ.க.வின் கொள்கையை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம். பா.ஜ.க.வை ஏற்கனவே விமர்சிக்கிறோம், தொடர்ந்து விமர்சிப்போம். அண்ணாமலை, தலைவர் பதவியில் இருந்து அப்புறப் படுத்தப்பட்டு விட்டார். ஆனாலும் அதை மறந்து விட்டு, ஊடகத்தின் கவ னத்தை ஈர்ப்பதற்காக, அவர் ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கிறார்.”

எனக் கூறியுள்ளார்.