சென்னை

மிழக அமைச்சர் மா சுப்பிரமணியன்  முதல்வர் மு க ஸ்டாலின் டிஸ்சார்ஜ் குறித்து தகவல்\தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனடியாக அவர் காலை 10.40 மணியளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ள சென்றார்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்றும், அவருக்கு மேலும் பல பரிசோதனைகள் செய்ய வேண்டி இருப்பதாகவும் தெரிவித்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தமிழ்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம்.

”சகோதரர் மு.க.முத்து மறைவால் ஒருநாள் முழுவதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாப்பிடாமல் இருந்துள்ளார். அதற்கு மறுநாள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் வரை நடைபயணம் மேற்கொண்டபோது முதல்-அமைச்சருக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை;

அவருக்கு பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். அப்பலோ ஆஸ்பத்திரியில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் எனும் தகவல் இன்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்படும்.”

என்று கூறியுள்ளார்.